அபகா கான் என்பவர் ஈல்கானரசின் இரண்டாவது மங்கோலிய மன்னன் ஆவார். இவரது தந்தை குலாகு கான். தாய் எசுன்சின். இவர் டொலுயின் பேரன் ஆவார். இவரது ஆட்சிக்காலம் 1265-1282 ஆகும். இவருக்குப் பிறகு இவரது தம்பி அகமது தேகுதர் ஆட்சி செய்தார்.[1] அபகாவின் பெரும்பாலான ஆட்சிக்காலமானது மங்கோலியப் பேரரசில் நடைபெற்ற உள்நாட்டுப் போரிலேயே கழிந்தது. குறிப்பாக ஈல்கானரசு மற்றும் வடக்கில் இருந்த தங்க நாடோடிக் கூட்டம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற போரைக் குறிப்பிடலாம். தோல்வியில் முடிந்த சிரியா மீதான படையெடுப்பிலும் இவர் பங்கெடுத்தார். இரண்டாம் ஓம்சு யுத்தத்திலும் பங்கெடுத்தார்.

அபகா கான்
படிமம்:AbaqaEnthroned.png
அரியணையில் தன் கதுனுடன் அபகா (தோர்ஜி கதுனாக இருந்திருக்க வாய்ப்புள்ளது)
ஈல்கான்
ஆட்சிக்காலம்8 பெப்ரவரி 1265 – 1282
முன்னையவர்குலாகு கான்
பின்னையவர்அகமது தேகுதர்
பிறப்பு(1234-02-27)27 பெப்ரவரி 1234
மங்கோலியா
இறப்புApril 4, 1282(1282-04-04) (aged 48)
அமாதான், ஈல்கானரசு
இராணிபுலுகான் கதுன்
குழந்தைகளின்
பெயர்கள்
அர்குன்
கய்கது
ஒல்ஜத்
எல் குத்லுக் கதுன் (மகள்)
அரசமரபுபோர்சிசின்
தந்தைகுலாகு கான்
தாய்எசுன்சின் கதுன்
மதம்பௌத்தம்

வாழ்க்கை

இவர் பெப்ரவரி 1234இல் மங்கோலியாவில்[2] பிறந்தார். அபகா பௌத்த மதத்தை சேர்ந்தவர் ஆவார். குலாகுவின் விருப்பத்திற்குரிய மகனான இவர் துருக்கிஸ்தானின் ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[3]

உசாத்துணை

  1. "ABAQA – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. Retrieved 2020-04-16.
  2. "ABAQA – Encyclopaedia Iranica". www.iranicaonline.org. Retrieved 2020-04-16.
  3. Runciman, p. 320.
"https://tamilar.wiki/w/index.php?title=அபகா_கான்&oldid=248158" இலிருந்து மீள்விக்கப்பட்டது