அப்பாஸ் அலி
கேப்டன் அப்பாஸ் அலி நேதாஜியின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய சுதந்திர போராட்ட வீரர். கேப்டன் அப்பாஸ் அலி பிரித்தானியாவின் இந்தியப் பேரரசுக்கும், ஆங்கிலேய ராணுவத்திற்கும் எதிராக கலகம் விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், ஆங்கிலேய அரசு சிறையில் அடைத்து 1945ல் மரண தணடனை வழங்கியது. பின்னர் 1947ல் இந்திய விடுதலைக்கு பிறகு இந்திய அரசால் விடுதலை செய்யப்பட்டார்.
அப்பாஸ் அலி | |
|---|---|
| பிறப்பு | 3 சனவரி 1920 Bulandshahr, உத்தரப் பிரதேசம், இந்தியா |
| இறப்பு | 11 October 2014 (aged 94) அலிகார், இந்தியா |
| சார்பு | ஆசாத் இந்த் |
| சேவை/ | இந்தியத் தேசிய இராணுவம் |
| சேவைக்காலம் | 1939–1947 |
| தரம் | கேப்டன் |
இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து லோக் நாயக் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் தேச நலனுக்காக மீண்டும் போராடிக் கைது செய்யப்பட்டு, 1977ல் விடுதலை செய்யப்பட்டார். கேப்டன் அப்பாஸ் அலி 11-10-2014 ல் அலிகாரில் 94வது வயதில் காலமானார்.[1].[2].