அலவாய்ப்பட்டி (Alavaipatti) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் அலவாய்ப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு சிற்றூராகும்.[3]அலவாய்மலை இந்த கிராமத்திற்கு அருகில் கிழக்கு திசையில் அமைந்துள்ளது.இந்த கிராமத்தின் பெயர் அலவாய்மலையிலிருந்து பெறப்பட்டது. பிற்காலத்தில் அது அலவாய்பட்டி ஆனது. அலவாய்மலை (Alavaimalai) [4] வெண்ணந்தூருக்குக் கிழக்கே அமைந்துள்ளதொரு மலையாகும். இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும். கொங்கு நாடு என்பது கிருஷ்ணகிரி தருமபுரி சேலம் நாமக்கல் ஈரோடு திருப்பூர் கோயமுத்தூர் நீலகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி ஆகும்.[5]

அலவாய்ப்பட்டி
—  ஊராட்சி  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாமக்கல்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
ஊராட்சி தலைவர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

பெயர்க் காரணம்

அலவாய்மலை[6] என்ற இங்குள்ள மலையின் பாதி உயரத்தில் அருள்மிகு ஸ்ரீ சுப்பராயர் முருகன் கோயில் உள்ளது.[7] உலைவாய் மலை என்ற பெயர் திரிந்து அலவாய்மலை என வழங்கப்படுகிறது. மலையின் அடிவாரத்தில் உள்ள ஊர் அலவாய்பட்டி என அழைக்கப்படுகிறது.

  • கொங்கணமலை: கொங்கண சித்தர் நீண்டகாலமாக இங்கே வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், இந்த மலைக்கு கொங்கணகிரி என்ற பெயரும் உண்டு.

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "TN Village". Archived from the original on 2016-04-07. Retrieved 2018-01-12.
  4. "அலவாய்மலை".
  5. "கொங்கு பகுதியில் அலவாய்மலை".
  6. "அலவாய்மலை".
  7. "அலவாய்மலை அருள்மிகு ஸ்ரீ சுப்ராயர் முருகன் ஆலயம்". Archived from the original on 2018-06-16. Retrieved 2018-05-17.
"https://tamilar.wiki/w/index.php?title=அலவாய்பட்டி&oldid=257104" இலிருந்து மீள்விக்கப்பட்டது