உல் ஆறு (Uhl River) என்பது இமயமலையில் உருவாகும் பியாஸ் ஆற்றின் நீர்நிலைகளின் ஒரு பகுதியாகும். இந்த நதி இமயமலையின் தௌலாதர் சிகரத்திலுள்ள தம்சர் பனிப்பாறையில் இருந்து உருவாகிறது. உல் பள்ளத்தாக்கு வழியாக படா கிரான் (பராகிராம்) மற்றும் பரோட் கிராமங்களைக் கடந்து செல்கிறது. அதன் கீழ் போக்கில், இது தியுன் நாலா என்றும், உல் பள்ளத்தாக்கு சோஹர் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கப்படுகிறது. சோஹர் பள்ளத்தாக்கைக் கடந்த பிறகு, பண்டோவிலிருந்து 5 கி.மீ. தொலைவில் பியாஸ் ஆற்றைச் சந்திக்கிறது.

உல் ஆறு
தியுன் நாலா
பராகிராமிலிருந்து உல் ஆறு கீழ் நோக்கி வருகிறது
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்இமாச்சலப் பிரதேசம்
பிரதேசம்ஆசியா
நகரம்பரோட், கமாண்ட், மாண்டி.
சிறப்புக்கூறுகள்
மூலம்தம்சர் பனிப்பாறை. தௌலாதர் சிகரம்
 • அமைவுஇமாச்சலப் பிரதேசம், இந்தியா
முகத்துவாரம்பியாஸ் ஆறு
 • அமைவு
இந்தியாவின் மண்டியிலிருந்து, 8 கி.மீ. மேல்நோக்கிப் பாய்கிறது
 • ஆள்கூறுகள்
31°42′58″N 76°59′50″E / 31.71611°N 76.99722°E / 31.71611; 76.99722
 • உயர ஏற்றம்
784 மீ (2,572 அடி)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 • இடதுலும்பா தக், புபா

இந்திய தொழில்நுட்பக் கழகம்

520 ஏக்கர் (2.1 கி.மீ. 2) நிலப்பரப்பில் பரவியிருக்கும் மண்டி, இந்திய தொழில்நுட்பக் கழகத்தின், உல் ஆற்றின் இடது கரையில் கமண்டில் (மண்டி நகரத்திலிருந்து சாலை வழியாக 15 கி.மீ) அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=உல்_ஆறு&oldid=292948" இலிருந்து மீள்விக்கப்பட்டது