ஏமலூர் (Yemalur) என்பது தென்னிந்தியாவின் கருநாடக மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும். இது பெங்களூர் நகரத்திலிருந்து 14 கி.மீ. தொலைவில் பெங்களூரின் எச்ஏஎல் வானூர்தி நிலையத்திற்கும் பெல்லந்தூர் ஏரிக்கும் இடையே அமைந்துள்ளது. இந்த சிற்றூரில் சுமார் 4000 மக்கள் வசிக்கின்றனர். பெங்களூரு ஒரு பெரிய நகரமாக மாறுவதற்கு முன்பிருந்தே பெரும்பாலும் உள்ளூர் மக்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

ஏமலூர்
நர்புற சிற்றூர்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
மாவட்டம்பெங்களூரு நகர மாவட்டம்
அரசு
 • வகைஊராட்சி
 • நிர்வாகம்கிராம ஊராட்சி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாககன்னடம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அஞ்சல் குறியீட்டு எண்
560037
ஐஎசுஓ 3166 குறியீடுIN-KA
வாகனப் பதிவுKA-53
மக்களவை தொகுதிபெங்களூர் மத்தி
மாநிலச் சட்டப் பேரவை தொகுதிமகாதேவபுரம்
இணையதளம்karnataka.gov.in

இந்த சிற்றூர் புகழ்பெற்ற சமூக சேவகரும், பழங்குடி ஆர்வலருமான டாக்டர். எச். சுதர்சன் பிறந்த ஊராகும். 2003 ஆம் ஆண்டில், கருணா அறக்கட்டளை மற்றும் எரின் அறக்கட்டளை ஆகிய இரண்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் இணைந்து இந்த சிற்றூரில் ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைத்து தந்துள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=ஏமலூர்&oldid=303024" இலிருந்து மீள்விக்கப்பட்டது