பராசரர் வியாசரின்தந்தை. சக்தி மகரிஷியின் மகன்.[1] இந்து சமயத்தின் ஆதாரநூல்களில் ஒன்றான பராசர-ஸ்ம்ருதி என்ற நூல் இவருடைய பெயரைத் தாங்குகிறது. விஷ்ணு புராணத்தின் மூல ஆசிரியரும் இவரே. வியாசர் இவர் எழுதிய விஷ்ணு புராணத்தை சீர்படுத்தி அவர் இயற்றிய மற்ற புராணங்களுடன் சேர்த்துக்கொண்டார்.[2]

பராசரர்
படிமம்:पराशर ऋषि.jpg
பராசரரது சிலை
சமயம்இந்து சமயம்

பன்னிரண்டாவது நூற்றாண்டில் ராமானுஜர் தன்னுடைய சீடர்களில் ஒருவருக்கு பராசரர் என்று பெயரிட்டார். அவர் பராசர பட்டர் என்று பிரசித்தி பெற்றார். அவர் தான் விஷ்ணு ஸஹஸ்ரநாமத்திற்கு ஒரு விரிவான பாஷ்யம் (உரை) இயற்றினார். 'பராசர-பட்ட பாஷ்யம்' என்றே புகழ் பெற்ற அவ்வுரை விஷ்ணு ஸஹஸ்ரநாமத்தின் இரண்டு சிறந்த பாஷ்யங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=பராசரர்&oldid=426681" இலிருந்து மீள்விக்கப்பட்டது