புள்ளலூர்
புள்ளலூர் அல்லது பொள்ளிலூர் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வாலாசாபாத் ஒன்றியத்தில் உள்ள ஒரு சிற்றூர் ஆகும்.[1] இந்தச் சிற்றூரில் மூன்று வரலாற்றுச் சிறப்புமிக்க போர்கள் நடைபெற்றுள்ளன: 611-12-இல் பல்லவ அரசன் மகேந்திரவர்மனுக்கும் சாளுக்கிய அரசன் இரண்டாம் புலிகேசிக்கும் இடையே நடந்த புள்ளலூர்ப் போர், ஐதர் அலிக்கும் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்திற்கும் இடையே நடந்த இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போரின் 1780, 1781 பொள்ளிலூர் போர்கள்.
புள்ளலூர் | |
|---|---|
சிற்றூர் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | காஞ்சிபுரம் |
| மக்கள்தொகை (2001) | |
| • மொத்தம் | 2,690 |
| மொழிகள் | |
| • அலுவல் முறை | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
மக்கள்தொகை
புள்ளலூரின் மக்கள்தொகை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 2,690; இதில் ஆண்கள் 1315 பெண்கள் 1375. பாலின வீதம் 1046 மற்றும் படிப்பறிவு வீதம் 63.52
மேற்கோள்கள்
உசாத்துணை
- "Primary Census Abstract - Census 2001". Directorate of Census Operations-Tamil Nadu. Archived from the original on 2011-02-17.