மீரா குமார் (பிறப்பு;மார்ச் 31, 1945) இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினரும் ஆவார். மீரா குமாரின் தந்தை முன்னாள் துணைப் பிரதமரும் தலித் மக்களின் தலைவருமான ஜெகசீவன்ராம் ஆவார். இவருடைய தாயார் இந்திய விடுதலைப் போராட்ட வீரரான இந்திராணி தேவி ஆவார். இவரின் கணவர் மஞ்சுல் குமார் உச்ச நீதிமன்றத்தில் வழக்குரைஞராக பணிபுரிபவர். இவர்களுக்கு அன்சூல், சுவாதி மற்றும் தேவங்னா ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். அனைவரும் திருமணம் ஆனவர்கள்.

மீரா குமார்
படிமம்:Meira Kumar.jpg
மக்களவைத் தலைவர்
பதவியில்
04 ஜூன் 2009 – 18 மே 2014
முன்னையவர்சோம்நாத் சட்டர்ஜி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு31 மார்ச்சு 1945 (1945-03-31) (அகவை 81)
பாட்னா, பீகார்
அரசியல் கட்சிஇ.தே.கா
துணைவர்மஞ்சூல் குமார்
பிள்ளைகள்1 மகன் மற்றும் 2 மகள்கள்
வாழிடம்புது தில்லி
As of ஜூன் 2, 2009
மூலம்: [1]

அரசியல் வாழ்க்கை

இவர் பீகாரில் உள்ள சசார் தொகுதியில் இருந்து இந்திய மக்களவைக்கு 2009 மே மாதம் நடைபெற்ற தேர்தலின் மூலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009 - 2014 காலகட்டத்தில் இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்தார். இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவைத் தலைவராக பொறுப்பு வகித்த முதல் (தலித்) பெண் இவராவார்.

2014ஆம் ஆண்டு பிஹாரின் சாசாராம் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பா.ஜ.காவின் சேகடி பஸ்வானிடம் தோற்றார்[1]. 2017 ஆம் ஆண்டில் நடந்த குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) வின் சார்பில் போட்டியிட்டுத் தோற்றார்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=மீரா_குமார்&oldid=469501" இலிருந்து மீள்விக்கப்பட்டது