வெள்ளிநேழி
வெள்ளிநேழி (Vellinezhi) என்பது தென்னிந்தியாவில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய ஆனால் கலாச்சார ரீதியாக முக்கியமான கிராமமாகும்.
நிலவியல்
மரங்கள் நிறைந்த, கரடுமுரடான நிலமாக இக்கிராமம் குந்தி நதியின் கரையில் அமைந்துள்ளது. இந்நதி தென்னிந்தியாவில் மத்திய கேரளாவைக் கடந்து மேற்கே பரந்து பாயும் பாரதப்புழாவின் துணை நதியாகும்.
கலை மற்றும் கலாச்சாரம்
இது கதகளி மற்றும் பாரம்பரிய கேரள தாளக் கலைஞர்களின் புகழ்பெற்ற இடமாகும். இது பல தசாப்தங்களாக, பல நூற்றாண்டுகளாக நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. இன்றைய தாராளமய-பொருளாதார உலகில் ஒப்பீட்டளவில் மெதுவாக வளர்ச்சியில் உள்ளது. அருகிலுள்ள சிறிய நகரம் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ள செறுபுலச்சேரி ஆகும்.
கலை கிராமம்
வெள்ளிநேழி அதன் கலை மரபிற்காகவும் பல பிரபல கலைஞர்களின் பிறப்பிடமாகவும் அறியப்பட்டிருந்தாலும், கலைக்கான கிராமமாக உருவாக்கும் யோசனை சமீபத்திய வளர்ச்சியாகும். 2012 சூலை 9 முதல் 14வரை மலையாள தினசரியான மலையாள மனோரமாவில் காளியரங்கித்தே பைருகம் (கதகளி நாடகத்தின் பாரம்பரியம்) என்ற தலைப்பில் வெள்ளிநேழி பற்றிய தொடர் கட்டுரைகளை வெளியிடுவதன் மூலம் இவை அனைத்தும் தொடங்கின. இந்த கட்டுரைகள் பாரம்பரிய முக்கியத்துவத்தையும் அதன் கலை வடிவங்களையும் முன்வைத்தன. மற்றொரு தினசரியான மாத்ருபூமி இரண்டு நாட்கள் (ஜூலை 12, 13) இதைப் பின்பற்றியது. ஆகஸ்ட் 21 முதல் 27 வரை மலையாள மனோரமா கலாகிராம் என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது. இந்த கருத்தரங்கு பொதுமக்களிடையே ஆர்வத்தையும் விழிப்புணர்வையும் தூண்டியது. பின்னர் பலராலும், இந்த விவகாரம் உயர் அரசாங்க அதிகாரிகளிடம் வைக்கப்பட்டது. மலையாள மனோரமா முன்வைத்த திட்டத்தை கலாச்சார அமைப்புகள், கலைஞர்கள் மற்றும் சொற்பொழிவாளர்கள் ஏகமனதாக ஆதரித்தனர். மதிப்பிற்குரிய மாவட்ட ஆட்சியர் சிறீ பி. எம். அலி அஸ்கர் பாஷா, ஐ.ஏ.எஸ் இதில் சிறப்பு ஆர்வம் காட்டினார். அவரது வேண்டுகோளின் பேரில், மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு அமைப்பு மேம்பாட்டு திட்டங்களுடன் முன்வந்தது. நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் கௌரவ துணைவேந்தரான சிறீ பி. என். சுரேஷ், மூலம் ஒரு விரிவான திட்டத்தை உருவாக்கி கலாமண்டலம் கனவை நினவாக்கினார்.
அக்டோபர் 13 அன்று சுற்றுலாத்துறை அமைச்சர் மாண்புமிகு சிறீ. அனில் குமார், வெள்ளிநேழி கலாகிராமம் குறித்த கருத்தரங்கை திறந்து வைத்தார். இந்த விழாவில் அமைச்சர் அதிகாரப்பூர்வமாக வெள்ளிநேழியை கலாகிராமம் என்று அறிவித்தார். திறந்த மன்ற விவாதத்தில் எம்.பி. ராஜேஷ் (பாராளுமனற உறுப்பினர் ) , திருமதி. கே.எஸ்.சலீகா (சட்டமன்ற உறுப்பினர்), பி.என்.சுரேஷ் (துணைவேந்தர், கலாமண்டலம் கலை பல்கலைக்கழகம்), கே.ஏ.பிரான்சிஸ் (தலைவர், கேரள லலிதகலா அகாடமி), டி.என்.கந்தமுதன் (தலைவர், மாவட்டப் பஞ்சாயத்து), கே. சி.ராமன் குட்டி (தலைவர், ஒன்றியப் பஞ்சாயத்து), திருமதி. சி.ஜி. கீதா (தலைவர், கிராம பஞ்சாயத்து), வி.ஹரிதாஸ் (துணைத் தலைவர், கிராம பஞ்சாயத்து), ஓ.என்.தாமோதரன் நம்பூதிரிப்பாடு, ராய் பிலிப் (ஒருங்கிணைப்பு ஆசிரியர், மலையாள மனோரமா) மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் பல்வேறு தரப்பு மக்களிடமிருந்தும் பல பிரபலங்கள் தீவிரமாக பங்கேற்றனர். கலாகிராம் என்ற கருத்துக்கு அவர்கள் முழு மனதுடன் ஒருமனதாக முன்வந்தனர்.
கோயில்கள்
ஒலப்பமண்ண மனை, சிறீ காந்தநல்லூர் சேத்திரம், செங்கினிகொட்டு காவு பரணிடப்பட்டது 2014-12-17 at the வந்தவழி இயந்திரம் போன்ற கோயில்களின் கலாச்சார ஆதரவினால் சுற்றியுள்ள வெள்ளிநேழி சில பாரம்பரிய கேரள கலை வடிவங்களின் தாயகமாக உயர்ந்துள்ளது. அவற்றில் முதன்மையானது நடன-நாடகம், கதகளி, தொழில்நுட்ப துல்லியம் மற்றும் அழகியல் தரம், இதன் பத்திக்காம்தோடி ராவுண்ணி மேனனின் காலத்தில் மிக உயர்ந்த உயரத்தை எட்டியது. அவர் காலுவாழி பாணியை கலையுணர்வுடன் மெருகூட்டினார். பின்னணி இசைக்கலைஞர்கள், தாளவாதிகள், அலங்காரம் (சுட்டி), உடைகள் (பெட்டி) கலைஞர்களுடன் சேர்ந்து அவரது சீடர்களின் தொகுப்பாகும். பின்னர் அவர் வெள்ளிநேழிக்கு பெருமை சேர்த்தார். இந்தக் கிராமத்தில், கோத்தவில் என்ற வீடு உள்ளது. இது கதகளி ஆடை வடிவமைப்புக்கும் தயாரிப்புக்கும் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
இசை மற்றும் நடனம்
கேரள பாணியிலான தாளக் குழுக்களான செண்டை மேளம் , தயம்பகா மற்றும் பஞ்சவாத்யம் போன்ற கலைஞர்களை பல ஆண்டுகளாக தயாரித்த விதிமுறைகளினால் வெள்ளிநேழி வளப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
- Olappamannamana Website பரணிடப்பட்டது 2020-06-13 at the வந்தவழி இயந்திரம்
- Vellinezhi Kalagramam
- Adakkaputhur