அய்யனேரி
அய்யனேரி
அயன் ஏரி என்ற ஏரி மருவி அய்யனேரி என மக்களால் அழைக்கப்படுகிறது.
1. அமைவிடம்
2.ஏரியின் வரலாறு
3.ஏரியின் பரப்பு
4.ஏரியின் பயன்பாடு
1.அமைவிடம்; இந்த ஏரி வடலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட சேராகுப்பம் கிராம எல்லைக்கு உட்பட்டது.தெற்கு வடக்காக
பிறைவடிவில் ஏரி வெட்டப்பட்டள்ளது.கடலூர் சேலம் ரயில் பாதைக்கு தென்புறத்தில் அதாவது சேராகுப்பம் கிராமத்துக்கு தென்மேற்கில் அமைந்துள்ளது.நாடு விடுதலை அடைந்தபின் கடலூர் சேலம் நெடுஞ்ச்சாலை அமைக்கும் போது இந்த ஏரி குறுக்கிட்டது.அதனால் ஏரிக்கு பாதிப்பு ஏற்படாமல் ஏரியின் நடுவழியாக சாலையை அமைத்துவிட்டனர். அம்புடன் கூடிய வில்போன்ற அமைப்பில் இந்த ஏரி அமைந்துள்ளது. சாலையின் குறுக்கே சிமெண்ட் குழாய்களை வைத்துள்ளதால் சாலையால் துண்டிக்கப்பட்ட ஏரியின் நீர் இருபுறமும் தொடர்பில் இருக்கிற்து.
2.ஏரியின் வரலாறு.13 ஆம் நூற்றாண்டில் மங்கலத்தைத் தலை நகராக கொண்டு ஆட்சி புரிந்த பல்லவ மன்னன் கோப்பெரு சிங்கன்
என்ற மன்னனால் வெட்ட பட்டது.மன்னனின் சிறப்பு பெயர் அயன்பெருமாள். அவருடைய சிறப்பு பெயரிலுள்ள அயன் பெயரால் இந்த ஏரி அழக்கப்பட்டு வந்தது. பின்னர் அது மருவி அய்யனேரி என வழங்கப்பட்டு வருகிறது.
3.ஏரியின் பரப்பு; இந்த ஏரி ஏறக்குறைய 55 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 200 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. 40 ஆண்டுகளுக்கு மேலாக தூர்வாரப்படாமல் இருப்பதால் ஏரியின் கொள்ளளவில் மூன்றில் இரண்டு பங்கு தூர்ந்து விட்டது.இந்த ஏரி அமைந்துள்ள இடம் மேற்கு கிழக்காக
சரிந்துள்ளதால் கோட்டக்கரை,காட்டுகொல்லை போன்ற இடங்களில் பெய்யும் மழையால் இந்த ஏரி நிரம்புகிறது.
4.இந்த ஏரி 200 ஏக்கர் நிலத்துக்கு பாசன வசதி அளிக்கிறது.நெல பயிரிடப்பட்டு வருகிறது.நிலத்தடி நீருக்கு இந்த ஏரி ஆதாரமாக உள்ளது.
ஒரு போகம் நெல் மட்டுமே பயிரிட தேவையான் நீர் இங்கு கிடைக்கும். தற்பொழுது நெய்வேலி நிலக்கரி சுரங்கத்திலிருந்து வெளியேற்ரப்படும் நீர் இந்த ஏரிக்கு வருவதால் மூன்று போகமும் நெல் பயிரிடப்படுகிறது.இந்த ஏரியில் மீன் வளர்க்க பொதுப்பணி துறையினாரால் ஏலம் விடப்பட்டு மீன் வளர்க்கப்படுகிறது.