செங்கம்
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் துர்க்கை அம்மன் கோவில் தெரு செய்யாற்றங்கரையில் அருகில் எழுந்து அருளும் அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோவில் இத்திருக்கோவிலுக்கு மிகப் பெரிய வரலாறு உண்டு பழம்பெரும் கல்வெட்டுக்களும் உண்டு இக்கோவிலுக்கு தேர் இருந்ததாகவும் அது ஆற்றில் அடித்துச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது வாய்மொழிக் கதைகள் சொல்லப்படுகிறது இக்கோவிலில் உள்ள அம்மனுக்கு பல பெயர்கள் உண்டு அதிகமான மக்கள் வளையல் காரி என்று அழைக்கின்றனர் ஒரு சில மக்கள் கன்னிமார் கோவில் என்று அழைக்கின்றனர் இன்னும் சிலர் துர்க்கையம்மன் கோவில் என்று அழைக்கின்றனர் பல மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணி செய்துள்ளார்கள் மிக விசேஷம் ஆடி மூன்றாம் வெள்ளி திருவிழா விசேஷம் இது பழமையான திருவிழா ஆகும்
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°18′N 78°48′E / 12.3°N 78.8°E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 272 மீட்டர் (892 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,200 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். செங்கம் மக்களின் சராசரி கல்வியறிவு 65% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 58% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. செங்கம் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில்

செங்கம் ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோயில் ஆனது 700 ஆண்டிற்க்கும் மேல் பழமையான கோவில் என்று கருதப்படுகின்றது. இந்த கோவிலின் கட்டிடக் கலை மற்றும் கட்டிட அமைப்பு, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலுக்கு முன்மாதிரி என்று சொல்லப்படுக்கின்றது.[சான்று தேவை] இக்கோயிலில் மகாகருட சேவை திருவிழா ஆண்டுதோறும் வைகாசி மாதம் வளர்பிறையில் மகா கருடசேவை திருவிழா கொடிஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.
ஆதாரங்கள்
- ↑ "Chengam". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)