சீர்காழி

68.42.35.163 (பேச்சு) பயனரால் செய்யப்பட்ட 15:59, 17 ஏப்பிரல் 2005 அன்றிருந்தவாரான திருத்தம்

சீர்காழிதடித்த எழுத்துக்கள் தற்போதைய தமிழ்நாட்டு மாவட்டமான நாகை மாவட்டத்தில் அடங்கியுள்ள ஒரு சிறு நகரம்.நகராட்சியான இந்நகரம்,வடக்கே ஏழு கிலோ மீடர் தொலைவில் கொள்ளிடம் நதியும்,ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் ஊரின் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் அடங்கிய வளமான நிலப்பகுதியைக் கொண்டது.இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்து கோவில்கள் உள.அவற்றில் சில, புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்திசுவரன் கோவில்,திருகோலக்கா,திருவெண்காடு அகோராநாதர் கோவில் மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்.பல தலைமுறைகளாய் இங்கு கிருத்துவர்களும்,கத்தோலிக்கர்கள் வசித்து வருகின்றனர்.கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர்.கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=சீர்காழி&oldid=191508" இலிருந்து மீள்விக்கப்பட்டது