சீர்காழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Naaradhar பயனரால் செய்யப்பட்ட 23:11, 22 அக்டோபர் 2009 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

சீர்காழி (Sirkazhi), தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறு நகரம். நகராட்சியான இந்நகரம், வடக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில் கொள்ளிடம் நதியும், ஊரின் நடுவில் கழுமலையாறு மற்றும் தெற்கு எல்லையில் உப்பனாறு எனும் ஆறுகள் ஓடும் வளமான நிலப்பகுதியைக் கொண்டது.

பல தலைமுறைகளாய் இங்கு கிறிஸ்தவர்களும் (கத்தோலிக்கர்கள்) வசித்து வருகின்றனர். கணிசமான எண்ணிக்கையிலான இசுலாமியர்கள் இந்நகரத்தின் வடக்கு பகுதியில் வசித்து வருகின்றனர். கடந்த ஐம்பது வருடங்களில் குடியேறிய மார்வாரிகளும் இவ்வூரில் வசித்து வருகின்றனர்.

இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள. அவற்றில் சில, சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில், திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில் புள்ளிருக்கு வேளூர் எனும் வைத்தீசுவரன்கோவில், மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில், திருக்கோலக்கா, திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் ,வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில், திருக்கடையூர், திருவெண்காடு,திருவாரூர், திருமீயச்சூர்,திருமணஞ்சேரி,வேள்விக்குடி மற்றும் திருநகரி விண்ணவர் கோவில்கள் என பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.

"https://tamilar.wiki/w/index.php?title=சீர்காழி&oldid=191522" இலிருந்து மீள்விக்கப்பட்டது