வனவாசி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. (October 2009) |
வனவாசி (ஆங்கிலம்:Vanavasi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
| — பேரூராட்சி — | |||||
| அமைவிடம் | 11°45′09″N 77°52′44″E / 11.752404°N 77.878770°E | ||||
| மாவட்டம் | சேலம் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| மக்கள் தொகை | 6,749 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
|
குறியீடுகள்
| |||||
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°45′N 77°53′E / 11.75°N 77.88°E ஆகும்.
மக்கள் வகைப்பாடு
வனவாசியில் முதலியார் மற்றும் தேவாங்க இனத்தைச் சார்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர்.வனவாசி நெசவுத் தொழிலைப் முக்கியத் தொழிலாகக் கொண்டது.குறிப்பாக பட்டுச் சேலை நெசவிற்கு சேலம் மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற இடமாகும்.மேலும் இங்கு விசைத்தறி கூடங்களும் நிறைய உள்ளன.இங்கு வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் வாரச் சந்தை கூடுகிறது.
பள்ளி மற்றும் நூலகம்
வனவாசியில் ஓர் அரசு ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மற்றும் அரசு மேனிலைப் பள்ளியும் உள்ளன.மேலும் ஒரு அரசு கிளை நூலகமும் வனவாசியில் செயல்பட்டு வருகின்றது.
கோயில்கள் மற்றும் திருவிழாக்கள்
வனவாசியில் நிறைய திருக்கோயில்கள் அமைந்துள்ளன.அவற்றில் குறிப்பிடத் தகுந்தவை மாரியம்மன் கோயில்,முத்துகுமாரசாமி கோயில்,திரௌபதியம்மன் கோயில்,சுப்ரமணியசாமி கோயில்,ஓம்காளியம்மன் கோயில்,பத்ரகாளியம்மன் கோயில்,சௌடேஸ்வரி அம்மன் கோயில்,முனியப்பன் கோயில் ஆகிய கோயில்கள் உள்ளன.இங்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் திரௌபதியம்மன் பண்டிகை மிகவும் புகழ் பெற்றதாகும்.ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் மாரியம்மன் பண்டிகையும் இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
References
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.