36 வயதினிலே

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:11, 19 சனவரி 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, replaced: ஆண்டுக்கான → ஆண்டிற்கான (2) using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

36 வயதினிலே (36 Vayadhinile) ரோசன் ஆண்ட்ரூஸ் இயக்கத்திலும், சூர்யா, தயாரிப்பிலும் வெளியாகியுள்ள தமிழ்த்திரைப்படம். இத்திரைப்படத்தில் ஜோதிகா, ரகுமான், அபிராமி, நாசர்ஆகியோர் முன்னணி கதைப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் சந்தோஷ் நாராயணனின் இசையிலும், ஆர். திவாகரனின் படத்தொகுப்பிலும் வெளியான தமிழ்த்திரைப்படமாகும்.

36 வயதினிலே
இயக்கம்ரோசன் ஆண்ட்ரூஸ்
தயாரிப்புசூர்யா
இசைசந்தோஷ் நாராயணன்
நடிப்புஜோதிகா
ரகுமான்
அபிராமி
நாசர்
ஒளிப்பதிவுஆர். திவாகரன்
படத்தொகுப்புமகேசு நாராயணன்
வெளியீடு15 மே 2015 (2015-05-15)
ஓட்டம்115
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு3 கோடி (US$470,000 )

இந்தத் திரைப்படம் 2015 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் தேதியன்று வெளியிடப்பட்டது. முக்கியமாக ஜோதிகாவின் நடிப்பில் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. இறுதியில் அவர் 63 ஆவது பிலிம்பேர் விருதுகள் தென்னிந்திய மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதில் சிறந்த நடிகைக்கான விருதை வென்றார். இவருடன் இணைந்து, 2015 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளில் இப்படம் ஏழு விருதுகளை வென்றது.[1][2]

நடிப்பு

  • ஜோதிகா - வசந்தி தமிழ்ச்செல்வனாக
  • ரகுமான் - தமிழ்ச்செல்வனாக
  • நாசர் - ஆணையர் இராஜனாக
  • இளவரசு - காய்கறி வணிகராக
  • சித்தார்த்த பாசு - இந்திய குடியரசுத்தலைவராக
  • அபிராமி (நடிகை) - சூசன் டேவிட்டாக
  • அம்ரிதா அணில் - மிதிலா தமிழ்ச்செல்வனாக
  • சேது இலக்சுமி - துளசியாக
  • டெல்லி கணேஷ் - வசந்தியின் மாமனாராக
  • ஜெயப்பிரகாசு
  • எம். எசு. பாசுகர் -ஸ்டீபனாக
  • போஸ் வெங்கட் - காவல் அலுவலராக
  • பிரேம் -ஜெயச்சந்திரனாக
  • கலாரஞ்சனி - வசந்தியின் மாமியாராக
  • தேவதர்சினி - கிரிஜா சீனிவாசனாக
  • சுஜாதா சிவகுமார் - இராணியாக
  • மோகன் ராமன் - நளபாகம் செல்லூர் பிச்சை
  • முத்துராமன் வசந்தியின் மேலதிகாரியாக
  • பயில்வான் இரங்கநாதன் - பயில்வான் இரங்கநாதன்
  • சிசர் மனோகர் - தானி ஓட்டுநராக
  • காலிது உசைன் - தோட்டக்கலை அலுவலராக
  • சிவகுமார்- இந்திய குடியரசுத்தலைவராக (குரல் மட்டும்)

கதை

குடும்பத்தின் பொருட்டு தன் கனவுகளையும் அடையாளத்தையும் இழந்துவிடும் மகளிர், குடும்ப வட்டத்தில் பொறியில் சிக்கியது போன்ற வாழ்விற்கு தள்ளப்படுகிறார்கள். குடும்பத்துக்காகவே பலவற்றையும் இழக்கிறார்கள்.[3] தன்னை இழந்து கணவன் குழந்தை என குடும்பத்துக்காக வாழும் ஒரு பெண். அவள் தன் குழந்தையாலும், கணவனாலும் ஒதுக்கி வைக்கப்படும் ஒரு நிலை. இச்சூழலில் அவள் எப்படி தன்னை அறிந்து, உணர்ந்து ஒரு பெரும் மதிப்பைப் அடைகிறாள் என்பதே இத்திரைப்படத்தின் கதை.[4] கல்லூரியில் படிக்கும் காலத்தில் எதையும் எதிர்கொண்டு எதிர்த்துப் போராடுகிற பெண், ஒரு நிலையில் தன்னை இழந்துவிட்டதை நன்கு உணரும் அவள் தன் 36ஆம் அகவையில் தன்னைக் மீளவும் காண்கிறாள்.

இசை

இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களையும் விவேக் எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=36_வயதினிலே&oldid=231762" இலிருந்து மீள்விக்கப்பட்டது