ஊதுபத்தி

தமிழர்விக்கியிலிருந்து
imported>CommonsDelinker பயனரால் செய்யப்பட்ட 10:40, 31 ஆகத்து 2014 அன்றிருந்தவாரான திருத்தம் (The file Image:Priest_or_seminarian_with_censor.jpg has been replaced by Image:Priest_or_seminarian_with_thurible.jpg by administrator commons:User:Marcus Cyron: ''File renamed: [[commons:COM:FR#reasons|File renaming c...)
Jump to navigation Jump to search
படிமம்:IncenseWikiVers.jpg
ஊதுபத்தி செய்யப் பயன் படும் நறும்ணப் புகை தரும் பொருட்கள். மேல் வரிசையில் இடமிருந்து வலாமாக - மாக்கோப் பொடி (Makko powder (抹香; Machilus thunbergii மச்சிலஸ் துன்பெர்கி), போர்னியோல் (Borneol) கற்பூரம் (camphor) (Dryobalanops aromatica டிரையொபலனோப்ஸ் அரோமாட்டிக்கா), சுமத்ரா (Sumatra) பென்சோயின் பிசின் (Benzoin) (Styrax benzoin ஸ்ட்டைராக்ஸ் பென்சோயின்), ஓமான்(Oman) பிரான்கின்சென்ஸ் (Frankincense) (Boswellia sacra போஸ்வெல்லியா சாக்ரா), குக்குல் (காமிஃவோரா வைட்டி (Commiphora wightii -Guggul), பொன்நிற பிரான்கின்சென்ஸ் (Boswellia papyrifera போஸ்வெல்லிய) பாபிரிஃவெரா), தோலு பால்சம் (Tolu balsam) (Myroxylon toluifera மைரொக்ஸிலான் தோலுயிஃவெரா), சோமாலியா (Somalia) மைர் (Myrrh) (Commiphora myrrha காமிஃவோரா மைர்ரா), லாப்டானம் (Labdanum) (Cistus villosus சிஸ்ட்டஸ் வில்லோசஸ்), ஓப்பாப்பனாக்ஸ் (Opoponax) (Commiphora opoponax காமிஃவோரா ஓப்பாப்பனாக்ஸ்), மற்றும் வெண் இந்திய சந்தனப் பொடி (Santalum album சன்ட்டலம் ஆல்பம்)

ஊதுபத்தி அல்லது அகர்பத்தி என்பது மணம் வீசும் புகையைத் தந்து எரியக்கூடிய ஒரு பொருள். பெரும்பாலும் இயற்கை பொருட்களாலும் சிறிது செயற்கை வாசனை நீர்மங்களாலும் சேர்ந்து செய்யப்பட்ட கலவையை ஆகும். எரிக்கும் பொது நறுமணப்புகை வெளிப்படுவதற்காக செய்யப்படுவதாகும்.

சமயங்களில் பயன்பாடு

கிறிஸ்தவம்

படிமம்:Priest or seminarian with thurible.jpg
வாசனை பொருள் சாடியை கையில் ஏந்தியவாறு பாதிரியார் மாணவர் ஒருவர்

வாசனைப் பொருட்கள் பல கிறிஸ்தவ சபைகளில் வழிபாடுகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. முக்கியமாக உரோமன் கத்தோலிக்கம், கிழக்க்கு மரபுவழித் திருச்சபை அங்கிலிக்கன், லூதரன் திருச்சபைகளில் இப்பயன்பாட்டைக் காணலாம். வாசனை பொருட்கள் நற்கருணை வழிபாட்டின் போதும் வெஸ்பர்ஸ் வழிபாட்டின் போதும் முக்கியமாக பயன்படுத்தப்படுகிறது. மூடிய சாடியுள் வைத்து வாசனைப் பொருட்கள் பயன்படுத்தப் படுகின்றன. சாடியுள் அனல் காணப்படும் அதனுள் தூள் படுத்திய வாசனைப் பெருளை இடுவதன் மூலம் நறுமணம் பெறப்படுக்கிறது. பின்னர் இச்சாடி பலிப்பீடம் நோக்கியோ வாசனைக் காட்டப்படும் நபர் நோக்கியோ மெதுவாக அசைக்கப்படும்.நேரடியாக எரிக்கப்படும் வாசனைப் பொருட்களை தவிர உயிர்த்த ஞாயிறு மெழுகுவர்த்திகளிலிலும் வாசனைப் பெருட்கள் கலக்கப்பட்டிருக்க்கும். கத்தோலிக்க மற்றும் கிழக்கு மரபுவழித் திருச்சப்பைகளில் வாசனைப் பொருட்களால் எழும் புகை விசுவாசிகளில் செபமாக கொள்ளப்படுகிறது.[1] விவிலியத்தின் கடைசி நூலான வெளிப்படுத்தல் நூலில் புனிதர்களின் செபங்கள் பாரிய பொன் வாசனைப் பொருட்கள் எரிக்கப்படும் பாரிய பொன் பாத்திரத்துக்கு ஒப்பிடப்படுகிறது(வெளி 5:8,வெளி 8:3).

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஊதுபத்தி&oldid=293653" இலிருந்து மீள்விக்கப்பட்டது