கே. சுப்பையா

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 10:02, 16 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8)

கே.சுப்பையா (பி: 1928) மலேசியாவில் மூத்த எழுத்தாளர்களுள் ஒருவராவார். சிங்காரவடிவேலன் எனும் புனைப்பெயரால் அறியப்பட்ட இவர் ஓய்வு பெற்ற தமிழாசிரியருமாவார். மேலும் இவர் நாளிதழ்களில் பகுதி நேர நிருபராகப் பணியாற்றியுள்ளதுடன், ம.இ.கா.வில் மாவட்ட, மாநிலப் பொறுப்புகளையும் வகித்துள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1960 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். சிறுகதைகள், கட்டுரைகள், சிறுவர் பாடல்கள், நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.

நூல்கள்

  • "சிங்கார வடிவேலன் சிறுகதைகள்" (1988)
  • "ஜூலியஸ் சீஸர்" (நாடகம், 1996)
  • "சிறுவர் பாடல்கள்" (1996)
  • "தெலுக் கெமாங்கில் தேசியத் தலைவர்"
  • "சிரம்பானில் தேசியத் தலைவர்"

பரிசில்களும், விருதுகளும்

  • அரசாங்கத்தின் AMN, PJK, PMC, JP ஆகிய விருதுகள்

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=கே._சுப்பையா&oldid=339451" இலிருந்து மீள்விக்கப்பட்டது