செம்மல்

imported>தென்காசி சுப்பிரமணியன் பயனரால் செய்யப்பட்ட 15:52, 27 சனவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:சங்க கால ஊர்கள்; added Category:குறிஞ்சிப் பாட்டில் வரும் மலர்கள் using HotCat)

செம்மல் என்னும் மலரை ஒரு தனி மலராகச் சங்கநூல் குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகிறது.[1] உதிர்ந்த பழம்பூக்களைச் செம்மல் எனக் குறிப்பிடும் சொல்லாட்சியும் உள்ளது.[2]

செம்மல் என்னும் செம்முல்லை
சேடல் என்னும் செங்காம்பு மில்லை. இதனை இக்காலத்தில் பவளமல்லி என வழங்குகின்றனர். இது மற்றொரு வகைச் செம்மல்

செந்நிறத்தில் காடுமேடுகளில் பூத்துக் கிடக்கும் மலரே செம்மல் எனல் பொருத்தமானது. குறிஞ்சிநிலக் கோதையர் இந்தச் செம்மல் மலரையே குவித்து விளையாடினர். அவர்கள் குவித்து விளையாடிய 99 வகையான மலர்களில் செம்மல் என்பது ஒன்று.

இவற்றையும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. பாடலடி 60
  2. உதிர்பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் - சிலப்பதிகாரம் - காடுகாண் காதை (சோலைவழி)
"https://tamilar.wiki/w/index.php?title=செம்மல்&oldid=370026" இலிருந்து மீள்விக்கப்பட்டது