செலாவணி

தமிழர்விக்கியிலிருந்து
Sukanthi (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 12:05, 21 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
வரைபடத்தை ஏற்றுகிறது....
கரன்சி கட்டிடம்
கரன்சி கட்டிடம், பி. பி. டி. பாகிலிருந்து (முன்னர்: டல்ஹவுசி சதுக்கம்) தோற்றம்
முன்னாள் பெயர்
ஆக்ரா வங்கி
ஆக்ரா மற்றும் மாஸ்டர்மேன் வங்கி
கரன்சி அலுவலகம்
இந்திய ரிசர்வ் வங்கி
பழைய கரன்சி கட்டிடம்[1]
நிறுவப்பட்டது1833 (கட்டப்பட்டது)
1868 (செலாவணி அலுவலகமாக மாற்றம்)
2020 (புணரமைப்பு)
வகைஅருங்காட்சியகம்
மேற்பார்வையாளர்டிஏஜி அருங்காட்சியங்கள்
தேசிய நவீன கலைக்கூடம், புதுதில்லி (NGMA)

கரன்சி பில்டிங் (Currency Building) என்பது 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் கொல்கத்தாவின் மத்திய வணிக மாவட்டமான பி. பி. டி. பாகில் (டல்ஹவுசி சதுக்கம்) உள்ள கட்டிடமாகும். இந்த கட்டிடம் முதலில் 1833 ஆம் ஆண்டு ஆக்ரா வங்கியின் கல்கத்தா கிளையை அமைப்பதற்காக கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டில், இது பிரித்தானிய ராஜ்ஜியத்தின் கீழ் நாணயக் கட்டுப்பாட்டாளரின் அலுவலகமான அரசாங்க நாணயத்தின் வெளியீடு மற்றும் பரிமாற்ற அலுவலகத்தால் பயன்படுத்தப்பட்டது. 1935 முதல் 1937 வரை, இந்திய ரிசர்வ் வங்கி கட்டிடத்தை தனது முதல் மைய அலுவலகமாகப் பயன்படுத்தியது. கட்டிடம் பயன்பாட்டில் இருந்தது, மேலும் ஒரு காலத்தில் மத்திய பொதுப்பணித் துறையால் ஒரு களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டது.

இதை 1994 இல் இடிக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். 1996 முதல் 1998 வரை, மத்தியப் பொதுப்பணித்துறை இடிப்புப்பணியை மேற்கொண்டது; ஆனால் [[கலை மற்றும் கலாச்சார பாரம்பரியத்திற்கான இந்திய தேசிய அறக்கட்டளை மற்றும் கொல்கத்தா நகராட்சி மூலம் கட்டிடம் முற்றிலும் இடிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டது. 2003 ஆம் ஆண்டில், இந்திய தொல்லியல் ஆய்வகத்துக்கு இதனைப் பாதுகாக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. தொல்லியல் ஆய்வகம் 2005 முதல் 2019 வரை கட்டிடத்தைப் புதுப்பித்தது. ஜனவரி 11, 2020 அன்று, பிரதமர் நரேந்திர மோடி அதை முறையாக அர்ப்பணித்து அருங்காட்சியகமாக மீண்டும் திறந்து வைத்தார்.

கரன்சி கட்டிடம் மூன்று மாடி இத்தாலியப் பாணிக் கட்டிடமாகும். இது பளிங்கு மற்றும் சுனார் மணற்கற்களாலான தளங்களைக் கொண்டுள்ளது. அதன் முக்கிய நுழைவாயில் இரும்பு மற்றும் வெனிசு சாளரங்களால் செய்யப்பட்ட மூன்று பகுதிகளாகவுள்ள வாயிலைக் கொண்டுள்ளது. இப்போது திறந்தவெளி முற்றமாகவுள்ள மைய மண்டபம், வான்விளக்குகளுடன் மூன்று பெரிய குவிமாடங்களை மேற்புறத்தில் கொண்டிருந்தது. நாணய அலுவலகமாகப் பயன்படுத்தப்படும் போது, ​​மத்திய மண்டபத்தில் ரூபாய் நோட்டுகள், தங்கம், வெள்ளி மற்றும் சிறிய மாற்றத்திற்கான பரிமாற்றத் துணைமுகப்புகள் இருந்தன. கட்டிடத்தைப் புதுப்பிக்கும் போது, ​​மத்திய மண்டபம் திறந்தவெளி நிகழ்ச்சிகளுக்கான இடமாக மறுசீரமைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=செலாவணி&oldid=378350" இலிருந்து மீள்விக்கப்பட்டது