துசுயந்தன்

imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 03:12, 13 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

துசுயந்தன் (துஷ்யந்தன்), இந்துத் தொன்மக் கதைகளின் படியும் பண்டைய இந்திய இலக்கியங்களின் படியும் ஒரு சிறந்த அரசன் ஆவான். இவரது மனைவி சகுந்தலை. பரத வம்சத்தை தோற்றுவித்த பரத மன்னனின் தந்தை ஆவார்.[1][2][3]

துஷ்யந்தன்
படிமம்:King Dushyanta proposing marriage with a ring to Shakuntala. Wellcome V0045115.jpg
மன்னர் துஷ்யந்தன் சகுந்தலைக்கு மோதிரம் அணிவித்து கந்தர்வ திருமணம் புரிதல்
சகோதரன்/சகோதரிசுஷ்மாந்தன், பீமன், பிரவசு மற்றும் வசு
குழந்தைகள்பரதன் (சகுந்தலை மூலம்)
நூல்கள்மகாபாரதம்
அரசமரபுசந்திர குலம்

கதையின் படி சகுந்தலை விசுவாமித்திரரின் மகள். இவரை ஆசிரமத்தில் சந்திக்கும் துசுயந்தன் காந்தர்வ மணம் புரிந்து கொள்கிறார். பின்னர் இவர் நாடு திரும்பி விட்டார். சகுந்தலையை மறந்தும் விடுகிறார். பின்னாளில் சகுந்தலை துசுயந்தனை சந்திக்கும் போது முன்பு நடந்தவற்றை நினைவு கொண்டு சகுந்தலையை மணந்து கொள்கிறார்.

மேற்கோள்கள்

  1. www.wisdomlib.org (2012-06-29). "Dushyanta, Duṣyanta: 11 definitions". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-28.
  2. Mahabharata, Adi Parva, Sambhava Parva
  3. www.wisdomlib.org (2019-01-28). "Story of Bharadvāja". www.wisdomlib.org (in ஆங்கிலம்). Retrieved 2022-11-27.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=துசுயந்தன்&oldid=401110" இலிருந்து மீள்விக்கப்பட்டது