தமிழ்நதி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Lingam பயனரால் செய்யப்பட்ட 09:22, 30 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
Jump to navigation Jump to search

கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட ஈழத்து தமிழ் பெண்எழுத்தாளர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பட்டம் பெற்றவர். ஈழத்தின் அரசியல் சிக்கல் காரணமாக 1992இல் கனடாவுக்குப் புலம்பெயர்ந்தார். 1996ஆம் ஆண்டிலிருந்து சிறுகதை, கவிதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார். சில பாடல்களும் எழுதியுள்ளார். ஓரிடத்தில் தரியாது, ரொறன்ரோ-தமிழகம்-ஈழம் என மூன்று இடங்களிலும் விரும்பி வாழ்ந்து வருகிறார்.

வெளிவந்த நூல்கள்

  • நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதியது (சிறுகதைகள்)
  • சூரியன் தனித்தலையும் பகல் (கவிதைகள், ஆகஸ்ட் 2007, பனிக்குடம் பதிப்பகம்)
  • இரவுகளில் பொழியும் துயரப்பனி (கவிதைகள்)
  • கானல் வரி (குறுநாவல்)
  • ஈழம்: தேவதைகளும் கைவிட்ட தேசம் (கட்டுரைகள்)
  • பார்த்தீனியம் (நாவல், 2016)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தமிழ்நதி&oldid=81194" இலிருந்து மீள்விக்கப்பட்டது