எம். குமரன்
எம். குமரன் (பிறப்பு: டிசம்பர் 27, 1939) மலேசியாவில் மூத்த தமிழ் எழுத்தாளர்களுள் ஒருவராவார். 'மலபார் குமார்' என்ற புனைப்பெயரில் எழுதிவரும் இவர் தன்முனைப்புப் பயிற்சியாளராகக் கடமையாற்றி வருகின்றார்.
எம். குமரன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
எம். குமரன் |
---|---|
பிறந்ததிகதி | டிசம்பர் 27, 1939 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
எழுத்துத் துறை ஈடுபாடு
1960 ஆம் ஆண்டு தொடக்கம் சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் எழுதியுள்ள இவர் சில மலையாளக் கதைகளை தமிழுக்கு மொழிபெயர்த்துமுள்ளார்.
நூல்கள்
- "செம்மண்ணும் நீல மலர்களும்" (குறுநாவல் - 1971)
- "சீனக் கிழவன்" (சிறுகதைத் தொகுப்பு - 1970)
பரிசில்களும் விருதுகளும்
இவரது கதைகளும் குறுநாவல்களும் பல பரிசுகள் வென்றுள்ளன.