ச. பொன்னுத்துரை

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ச. பொன்னுத்துரை ஒளிப்படம் - 1
Ponnuthurai.jpg
முழுப்பெயர் சண்முகம்
பொன்னுத்துரை
ஆங்கிலத்தில் பெயர் Espo
புனைபெயர்
பிறப்பு 1932
இறப்பு நவம்பர் 26,
2014 (அகவை 82)
பிறந்த இடம் இலங்கை,
யாழ்ப்பாணம், நல்லூர்
தேசியம் அவுஸ்திரேலியா
அறியப்படுவது எழுத்தாளர்
வகை சிறுகதை, புதினம்
நாடகம், கட்டுரை
Ponnuthurai2.jpg
இலக்கிய சந்திப்பொன்றில் இ. தியாகலிங்கம், அமரர் ச. பொன்னுத்துரை உடன் அமரர் பிரபஞ்சன்

எஸ்பொ என அறியப்படும் ச. பொன்னுத்துரை (4 சூன் 1932 - 26 நவம்பர் 2014) ஈழத்தின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். சிறுகதை, புதினம், நாடகம், கவிதை, விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல் என பல பரிமாணங்களிலும் எழுதியவர். 40 இற்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1989 முதல் புலம் பெயர்ந்து ஆத்திரேலியாவின் சிட்னி நகரில் வாழ்ந்து வந்தார். சென்னையில் மித்ர என்ற பதிப்பகத்தை நிறுவி அதன் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டிருந்தார்.

வாழ்க்கைச் சுருக்கம்

யாழ்ப்பாணம், நல்லூரில் சண்முகம் என்பவருக்குப் பிறந்த இவர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் தமிழ்நாடு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வி பயின்றார். ஆசிரியராகப் பணியில் சேர்ந்து 1956 இல் மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். நைஜீரியாவிலும் ஆசிரியராகப் பணியாற்றினார்.

ச. பொன்னுத்துரை (ச.பொ) (மே 24, 1932 - நவம்பர் 26, 2014) ஈழ இலக்கியத்தின் முதன்மைப்படைப்பாளிகளில் ஒருவர். ச. பொன்னுத்துரை இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் மாவட்டம் நல்லூரில் பண்டாரக்குளம் பகுதியில் மே 24, 1932-ல் பிறந்தார். தந்தை சண்முகம். தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியிலும் உயர்கல்வி பயின்றார். இதழாசிரியர், பதிப்பாசிரியர். ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் இலங்கையிலும், நைஜீரியாவிலும் பணியாற்றினார். புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவில் வாழ்ந்தார். அவரது படைப்புகளில் நாவல், சிறுகதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்பு, அரசியல், வரலாறு ஆகியவை அடங்கும். ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். ஈழத்தின் முற்போக்கு இலக்கியத்திற்கு எதிராக உணர்வுகளையும், அழகியலையும் முன்வைக்கும் நற்போக்கு இலக்கியத்தை ஆரம்பித்து புதிய படைப்பாளிகள் நடுவே அலைகளை உருவாக்கினார்.

தனி வாழ்க்கை

ச. பொன்னுத்துரை ஈஸ்பரம் என்பவரை தன் இருபத்து நான்காம் வயதில் திருமணம் செய்துகொண்டார். ஈஸ்பரம் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்தார். இவர்களது பிள்ளைகள் மேகலா, அநுர, மித்ர, புத்ர, இந்ர. மகன் மித்ர (மித்திரா) அர்ச்சுனா என்ற பெயரில் கடற்புலிகள் இயக்கத்தில் இணைந்து ஈழப்போரில் பங்குபெற்றார், 1986-ல் மரணமடைந்தார். மகன் அநுர சிட்னியில் புகழ்பெற்ற மருத்துவர். புத்ர ஒரு விபத்தில் மரணமடைந்தார். பொன்னுத்துரை 1989-ல் ஆஸ்திரேலியாவின் சிட்னி நகருக்குப் புலம் பெயர்ந்தார். ஆஸ்திரேலியக் குடியுரிமை பெற்றார்.

ஆசிரியப்பணி

பொன்னுத்துரை 1956-ல் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்து இலங்கை மட்டக்களப்புக்கு இடம் பெயர்ந்தார். இங்கு ஆசிரியராகவும், பாடசாலை அதிபராகவும் பணியாற்றினார். 1982-ல் ஆப்பிரிக்காவின் நைஜீரியாவில் ஆசிரியராகவும், ஆங்கில மொழியியல் துறையின் தலைவராகவும், பணியாற்றி ஓய்வு பெற்றார்.

இதழியல்

  • கொழும்பில் ஆசிரியராகப் பணியாற்றிய காலத்தில் ரஹ்மான நடத்திய 'இளம்பிறை' இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார் பொன்னுத்துரை.
  • ஆஸ்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த 'அக்கினிக்குஞ்சு' என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார்.

பதிப்பியல்

பொன்னுத்துரை சென்னையில் ’மித்ர’ பதிப்பகத்தின் மூலம் நூல்களை வெளியிட்டார்.

நாடக வாழ்க்கை

பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறின. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.


எழுத்துலகில்

தனது 13வது அகவையில் எழுத ஆரம்பித்தார். 1940 இல் இவரது மூத்த சகோதரர் தம்பையா ஞானோதயம் என்ற கையெழுத்து இதழை நடத்திய பொழுது அதில் எழுத ஆரம்பித்தார். பொன்னுத்துரை எழுதிய முதலாவது கவிதை வீரகேசரியில் வெளியானது. பொன்னுத்துரையின் முதலாவது சிறுகதை 1948 ஆம் ஆண்டில் சுதந்திரன் பத்திரிகையில் வெளியானது. தமிழக இதழ்களான காதல், பிரசண்ட விகடன், ஆனந்தபோதினி ஆகிய சஞ்சிகைகளிலும் எழுதினார்.[1]

இவர் எழுதிய முதலாவது புதினம் தீ ஈழத்து இலக்கியத்தில் ஒரு திருப்புமுனையை தோற்றுவித்ததுடன் பல சர்ச்சைகளையும் உருவாக்கியது. தமிழகத்தில் சரஸ்வதி என்ற இதழை நடத்திய வ. விஜயபாஸ்கரனின் முயற்சியால் இந்நூல் வெளியானது. இதனால், பொன்னுத்துரையும் தமிழ் இலக்கிய உலகில் ஒரு சர்ச்சைக்குரிய மனிதராக இருந்து வந்தார்.[1] புரட்சிப்பித்தன், பழமைதாசன் போன்ற பல புனை பெயர்களில் இவர் எழுதினார்.

இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960களில் அதிலிருந்து விலகி நற்போக்கு அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ. அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.[1]

சடங்கு, தீ, ஆண்மை, வீ, நனைவிடைதோய்தல், இனி ஒரு விதி செய்வோம் எனப் பல புதினங்களை எழுதிப் புகழ் பெற்றார். பொன்னுத்துரையின் சில நாடகங்கள் இலங்கை, இந்தியா, ஆத்திரேலியா முதலான நாடுகளில் மேடையேறியுள்ளன. தமிழ்நாட்டில் சில தொலைக்காட்சிகளிலும் சில தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார்.[1]

ஆத்திரேலியாவில் சிறிது காலம் வெளிவந்த "அக்கினிக்குஞ்சு" என்ற பன்னாட்டு இதழின் கௌரவ ஆசிரியராக இருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய ஹால என்ற நாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் நுகுகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் "Weep Not Child" என்ற நாவலை தமிழில் "தேம்பி அழாதே பாப்பா" என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

கொழும்பிலிருந்து வெளிவரும் ஞானம் இதழில் அதன் ஆசிரியரின் கேள்விகளுக்கு எஸ்.பொ தெரிவிக்கும் நீண்ட பதில்களைக் கொண்ட தொடர் நேர்காணல் பல மாதங்களாக வெளியானது. பின்னர் இத்தொடர் தீதும் நன்றும் பிறர்தர வரா என்ற தலைப்பில் 2007 இல் நூலாக வெளியானது.

இவரது நேர்காணல்கள், கட்டுரைகள் அடங்கிய இனி ஒரு விதி செய்வோம் என்ற நூலும் வெளிவந்துள்ளது. 1924 பக்கங்களில் வரலாற்றில் வாழ்தல் என்ற தமது சுய வரலாற்று நூலையும் எழுதியுள்ளார். சென்னையில் 'மித்ர' பதிப்பகத்தின் மூலம் நூல் வெளியீடுகளிலும் ஈடுபட்டார்.

நற்போக்கு

ஈழ இலக்கியத்தின் கலகக்குரலாக ஒலித்தவர் ச.பொ. கைலாசபதி, சிவத்தம்பி இருவராலும் முன்வைக்கப்பட்ட முற்போக்கு எழுத்திற்கு மாற்றாக 'நற்போக்கு' எழுத்தை புதிய படைப்பாளிகள், வாசகர்கள் நடுவே அறிமுகப்படுத்தினார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தீவிரமாகச் செயற்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் கருத்து ரீதியாக முற்போக்கு எழுத்தாளர்களுடன் முரண்பட்டு 1960-களில் அதிலிருந்து விலகி 'நற்போக்கு'அணியைத் தொடக்கினார். அவருடன் இளம்பிறை ரஹ்மான், வ.அ. இராசரத்தினம் போன்ற சிலரும் வெளியேறினர்.

மொழிபெயர்ப்பு

ச. பொன்னுத்துரை ஆப்பிரிக்க நாவல்களை மொழிபெயர்த்து வெளியிடுவதில் தனி ஆர்வம் கொண்டிருந்தார். செம்பென் ஒஸ்மான என்ற செனகல் நாட்டு எழுத்தாளர் எழுதிய 'ஹால'(Xala) என்ற குறுநாவலை மொழிபெயர்த்துள்ளார். மற்றும் கூகி வா தியங்கோ என்ற கென்யா நாட்டு இலக்கிய எழுத்தாளரின் 'Weep Not Child' என்ற நாவலை தமிழில் 'தேம்பி அழாதே பாப்பா' என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.

இலக்கிய இடம்

‘ஈழத்து இலக்கியப் பிதாமகர் என்று அழைக்கப்படும் ச.பொவின் முதன்மையான ஆக்கம் என்பது மெல்லிய கேலியுடன் யாழ்ப்பாணத்து நடுத்தர வாழ்க்கையைப் பார்க்கும் 'சடங்கு' என்ற குறுநாவல்தான். தனிமனித வாதத்தைத் தன் படைப்பு மனத்தில் இருந்து மட்டுமே பெற்றுக்கொண்டு தன் படைப்பாணவத்தினால் மட்டுமே நிலைநிறுத்த முயன்ற படைப்பாளி.


விருதுகள்

இவருக்கு தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2010 ஆம் ஆண்டுக்கான வாழ்நாள் இயல் விருது வழங்கப்பட்டது.

படைப்புகள்

  • வீ (சிறுகதைகள்)
  • ஆண்மை (சிறுகதைத் தொகுதி)
  • தீ (நாவல்)
  • சடங்கு (நாவல்)
  • அப்பையா
  • எஸ்.பொ கதைகள்
  • கீதை நிழலில்
  • அப்பாவும் மகனும்
  • வலை + முள்
  • பூ
  • தேடல்
  • முறுவல்
  • இஸ்லாமும் தமிழும்
  • பெருங்காப்பியம் பத்து (தொகுப்பாசிரியர்)
  • மத்தாப்பு + சதுரங்கம்
  • ?
  • நனவிடை தோய்தல்
  • நீலாவணன் நினைவுகள்
  • இனி ஒரு விதி செய்வோம்
  • வரலாற்றில் வாழ்தல் (சுயசரிதை)
  • ஈடு (நாடகம்)(அ.சந்திரஹாசனுடன் சேர்ந்து எழுதியது)
  • மாயினி
  • மணிமகுடம்
  • தீதும் நன்றும்
  • காந்தீயக் கதைகள்
  • காந்தி தரிசனம்
  • மகாவம்ச (மொழிபெயர்ப்பு)

மறைவு

எஸ். பொன்னுத்துரை 2014 நவம்பர் 26 அன்று சிட்னி கொன்கோர்ட் மருத்துவமனையில் காலமானார்[2]. இவரது ஒரு மகன் ஈழப்போரின் போது 1986 கடற்சமரில் இறந்த ஒரு மூத்த விடுதலைப் புலிப் போராளி ஆவார்.

வெளி இணைப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 முருகபூபதி, லெ. (26 நவம்பர் 2014). "சரித்திரத்தின் நித்திய உபாசகன் எஸ்.பொன்னுத்துரையின் சுவாசமே எழுதுதல்தான். ஆறுதசாப்த காலத்தையும் கடந்து எழுத்தூழியத்தில் தவமிருந்த எஸ்.பொ". பதிவுகள். Archived from the original on 2015-06-19. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2014.
  2. "Es Po passes away in Australia". தமிழ்நெட். 26 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 28 நவம்பர் 2014.
"https://wiki1.tamilar.wiki/index.php?title=ச._பொன்னுத்துரை&oldid=43300" இருந்து மீள்விக்கப்பட்டது