அதிரகசியம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அதிரகசியம் என்பது 15 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு சைவ தமிழ் இலக்கியம் ஆகும். இதனை சிவஞான வள்ளல் இயற்றினார்.
இந்த நூலில் 66 விருத்தங்கள் உள்ளன. ஆன்மா என்னும் உயிர் குருவைத் தேடிக் கண்டு பாடம் கேட்பதாக (உபதேசம் பெறுவதாகப்) பாடல்கள் அமைந்துள்ளன. ஆன்மாவின் குரு இறைவன். மேலும் இதில் துறவின் இலக்கணம் விரித்துரைக்கப்பட்டுள்ளது.
உசாத்துணை
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினைந்தாம் நூற்றாண்டு, 2005