இயைபுருவகம்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search

இயைபுருவகம் (இயைபு உருவகம்) என்பது தண்டியலங்காரம் நூலிலில் கூறப்பட்டுள்ள பாடல் அணிகளில் ஒன்று. [1] ஒப்பு நோக்குக: இயைபிலியுருவகம்

பாடல் எடுத்துக்காட்டு

செவ்வாய்த் தளிரும் நகை முகிழும் கண் மலரும்
மை வார் அளக மதுகரமும் - செவ்வி
உடைத்தாம் திருமுகம் என் உள்ளத்து வைத்தார்
துடைத்தாரே அன்றோ துயர் [2]

பாடலின் பொருள்

அவர் (மால்) தன்
செவ்வாயாகிய தளிரையும்
புன்னகை என்னும் அரும்பையும்
பார்வை மலரையும்
கூந்தலைச் சுற்றும் வண்டுகளையும்
என் உள்ளத்தில் நிலைக்கும்படி வைத்திருக்கிறார்
அதனால் என் துயரத்தைப் போக்கினார்

தளிர், அரும்பு, மலர், வண்டு ஆகிவை ஒன்றோடொன்று இயைபு உடையவை. எனவே இது இயைபு உருவகம்.

மேற்கோள்

  1. தண்டியலங்காரம், திருப்பனந்தாள் மடம் பதிப்பு, 1967, பக்கம் 89
  2. வெண்பா சொல் பிரிப்பு - பதிவு
"https://tamilar.wiki/w/index.php?title=இயைபுருவகம்&oldid=277177" இலிருந்து மீள்விக்கப்பட்டது