இரா. பிரேமா
இரா. பிரேமா | |
|---|---|
| பிறப்பு | மார்ச் 15, 1954 பெரியகுளம், தேனி மாவட்டம் |
| தேசியம் | இந்தியர் |
| கல்வி | முனைவர் |
| பணி | பேராசிரியர் |
| அறியப்படுவது | எழுத்தாளர், ஆய்வாளார், பெண்ணிய ஆர்வலர் |
| குறிப்பிடத்தக்க படைப்புகள் | பெண்ணியம், பெண்ணியம் அகலமும் ஆழமும், பெண்ணியக் கதைகள், பெண் மையக்கதைகள், நூறு பெண்கள் நூறு சிறுகதைகள் |
| விருதுகள் | மகாகவி பாரதியார் விருது, நல்லாசிரியர் விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது |
இரா. பிரேமா (R. Prema) (பிறப்பு: மார்ச் 15, 1954) தமிழ்நாட்டைச் சேர்ந்த எழுத்தாளரும், பெண்ணிய ஆர்வலரும், ஆய்வாளரும் ஆவார்.[1]
கல்வி
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் முதுகலை தமிழ், இதழியல், மக்கள் தொடர்பியலில் முதுகலை பட்டம் பெற்றவர். பிரேமா, இராமாயண கிளைக்கதைகளை ஒப்பிட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.[2]
பணி
பிரேமா, சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரியில் தமிழ்த் துறையில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். அரசுப் பணி ஒய்விற்குப் பின்னர், கொரட்டூர் பக்தவத்சலம் மகளிர் கல்லூரியில் நான்கு வருடங்கள் முதல்வராகப் பணியாற்றினார். இவர் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.[3] இதில் பல தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களிலும் புதுச்சேரி, புதுவை பல்கலைக்கழகத்திலும் முதுகலை, இளங்கலை வகுப்புகளுக்கு பாடநூல்களாகவும் ஆய்வு மாணவர்களுக்கு நோக்கு நூல்களாகவும் உள்ளன. சாகித்ய அகாதமிக்காகப் பெண்மையச் சிறுகதைகள்[4] என்ற தலைப்பில் ஒரு நூற்றாண்டுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களின் சிறுகதைகளைத் தொகுத்துத் தந்துள்ளார். இவரின் பெண்ணியக் கதைகள், பெண்மையச் சிறுகதைகள் ஆகிய நூல்களை இளநிலை, முனைவர் பட்ட ஆய்வாளர்கள் ஆய்வு செய்து பட்டம் பெற்றுள்ளனர்.[5]
எழுதியுள்ள நூல்கள்
- இராமாயணக் கிளைக்கதைகள் ஒப்பீடு: கம்பன், வால்மீகி, துளசிதாசர்
- தமிழகத்தில் இராமாயணத் தாக்கம்
- பெண்ணியம்
- பெண்ணியம் அணுகுமுறைகள்
- கற்பு – சதி – கலாச்சாரம்
- கற்பு கலாச்சாரம் (தனிப்பதிப்பு)
- குறுந்தொகை – உரை
- பெண் மரபிலும் இலக்கியத்திலும்
- வை. மு. கோதைநாயகி அம்மாள்[6]
- பெண் குலத்தின் பொன் விளக்கு
- காப்பியச் சிந்தனைகள்
- பெண்ணியக் கதைகள் (தொகுப்பு)
- பெண் மையச் சிறுகதைகள் (தொகுப்பு)
- பெண் எழுத்துக்களின் அரசியல்
- பெண் விடுதலையும் பெண் உரிமையும்
- பெண்ணியக் கோட்பாட்டாளர்கள்
- விடுதலை வேண்டினும் (கவிதைத் தொகுப்பு)
- பெண்ணியம் அகலமும் ஆழமும்
- சுல்தானாவின் கனவு (மொழிபெயர்ப்பு நூல்)
- உடைபடும் மௌனங்கள் (சிறுகதைத் தொகுப்பு)
- எங்களோட கதை
- பெண்ணியம் அறிவோம்
- நூற்றாண்டு கண்ட பெண் இலக்கிய ஆளுமைகள்
- நூறு பெண்கள் நூறு சிறுகதைகள்[7]
- இரட்டைக் காப்பிய கிளைக் கதைகளும் துணைக் கதைகளும் (பேராசிரியர் முத்துச்சண்முகன் என்பவருடன் இணைந்து எழுதியது)
விருதுகள்
- 2012 - தமிழக அரசின் மகாகவி பாரதியார் விருது[8] வழங்கி, தகுதிச் சான்றிதழும், ஒரு லட்சம் ரூபாய்கான காசோலையும், தங்கப் பதக்கமும் வழங்கிச் சிறப்பித்தது.·
- 2012 - சென்னை அரிமா சங்கம், 2011-2012ஆம் ஆண்டிற்கான நல்லாசிரியர் விருது
- 2011 - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வைர விழா -நிறுவன வளர்ச்சியில் பங்கேற்ற நூல் ஆசிரியர்
- 2016 - சேலம் தமிழ்ச் சங்கம், சேலம் க. இராசாராம் இலக்கியப் பரிசு
- 2016 - நாகர்கோவில் கலை இலக்கிய மேம்பாட்டு உலகப் பேரவை - சுந்தர ராமசாமி இலக்கிய விருது-2016
- 2016 - சென்னை பாரதியார் சங்கமும் ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் - பாரதிச் செம்மல் விருது
- 2016 - எட்டயபுரம் - மகாகவி பாரதியாரின் 135ஆவது பிறந்த நாள் விழாவில், அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் - பாரதி பணிச் செல்வர் விருது.
மேற்கோள்கள்
- ↑ "பெண்ணியம் இல்லையென்றால் சமூகம் முன்னேறாது (இரா. பிரேமா நேர்காணல்)". இந்து தமிழ் திசை.
- ↑ Ilakkiyaveli Tv (2025-05-03), பேராசிரியர் இரா. பிரேமா அவர்களுடன் ஒரு நேர்காணல் | பேராசிரியர் ஏ.இராஜலட்சுமி | இலக்கியவெளிடிவி, retrieved 2025-06-26
- ↑ "வரலாற்று ஆவணமான கதைகள் (நூறு பெண்கள் நூறு சிறுகதைகள் நூல் விமிர்சனம்)". இந்து தமிழ் திசை.
- ↑ பிரேமா, இரா. பிரேமா (2007). பெண்மையச் சிறுகதைகள்(தொகுப்பு) (2nd ed.). சாகித்ய அகாதெமி.
- ↑ "பெருமைக்குரிய பெண்கள்". வல்லினச் சிறகுகள்: 16.
- ↑ "புத்தகம் புதுசு(வை.மு. கோதைநாயகி அம்மாள் நூல் விமிர்சனம்)". குமுதம். 19.11.2001.
- ↑ "நூறு பெண்கள் - நூறு சிறுகதைகள் ஓர் உரையாடல்". உங்கள் நூலகம். மார்ச் 2025.
- ↑ "தமிழ் வளர்ச்சி துறை".