இருட்டு கடை

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
இருட்டு கடை
வகைசிற்றுண்டி
நிறுவுகை1900
தலைமையகம்திருநெல்வேலி, இந்தியா திருநெல்வேலி நகரம்
சேவை வழங்கும் பகுதிதிருநெல்வேலி, தமிழ்நாடு
உற்பத்திகள்அல்வா, சிற்றுண்டி

இருட்டு கடை (Iruttu Kadai) என்பது தமிழ்நாட்டின் திருநெல்வேலி நகரத்தில் நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோயில் எதிரில் அமைந்துள்ள ஒரு இந்திய இனிப்பு மற்றும் சிற்றுண்டி கடை ஆகும். இது கோதுமை, சர்க்கரை மற்றும் நெய் ஆகியவற்றால் செய்யப்பட்ட இந்திய இனிப்பு அல்வா வகைக்காக "இருட்டு கடை அல்வா" என்று அறியப்படுகிறது.[1][2] இந்த கடை பல தசாப்தங்களாக திருநெல்வேலி நகரின் அடையாளமாக மாறியுள்ளது.

வரலாறு

இருட்டு கடை 1900-ல் நிறுவப்பட்டது. இக்கடை நிறுவிய நாளிலிருந்து இன்றுவரை விரிவாக்கப்படாமல் உள்ளது. இருந்தும் இந்த கடை திருநெல்வேலி நகருக்கு அடையாளமாக மாறிவிட்டது.[3]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=இருட்டு_கடை&oldid=281802" இலிருந்து மீள்விக்கப்பட்டது