இலலிதா ராய்

இலலிதா ராய் (Lolita Roy) (1865 இல் பிறந்தார்).[1] மேலும் திருமதி. பி. எல். ராய் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய சமூக சீர்திருத்தவாதியும் பெண்கள் வாக்குரிமைக்காகப் போரடியவரும் ஆவார்.[1] இலண்டனில் உள்ள இந்தியர்களின் சமூக வாழ்விலும், பிரிட்டனிலும், இந்தியாவிலும் பெண்களின் வாக்குரிமைக்கான பிரச்சாரங்களிலும் தீவிரமாக பங்கு வகித்தார்.[1] 1911இல் நிகழ்த்தப்பட்ட இவர் தி வோட் என்ற ஆங்கில நாடகத்தில் 'இந்தியப் பெண்களில் மிகவும் சட்ட உரிமை பெற்றவர்' என்று விவரிக்கப்பட்டார்.[2]
வாழ்க்கை
இலலிதா ராய் 1865இல் இந்தியாவின் கொல்கத்தாவில் பிறந்தார்.[1] இவர் 1886 இல் கொல்கத்தாவில் அரசு பொது வழக்கறிஞரான பியரா லால் ராய் என்பவரை மணந்தார்.[3] தம்பதியருக்கு லீலாவதி, மிராவதி, பரேஷ் லால், ஹிராவதி, இந்திர லால், லோலித் குமார் என ஆறு குழந்தைகள் பிறந்தனர்.[1] 1900 வாக்கில், இவர் தனது குடும்பத்துடன் மேற்கு லண்டனில் வசித்து வந்தார்.[1]
இலண்டனில், இவர் இந்தியர்களுக்கான பல சமூக மற்றும் ஆர்வலர் சங்கங்களிலும் தீவிரமாக இருந்தார்.[1] மேலும் இலண்டன் இந்திய ஒன்றிய சங்கத்தின் தலைவராகவும்,[4] தேசிய இந்திய சங்கத்தின் குழு உறுப்பினராகவும் ( மேரி கார்பெண்டரால் 1870 இல் நிறுவப்பட்டது) இருந்தார்.[1] இலண்டன் இந்திய ஒன்றிய சங்கம் இலண்டனில் உள்ள இந்திய பல்கலைக்கழக மாணவர்களை ஆதரிக்க உதவியது (அப்போது சுமார் 700 பேர் இருந்தனர்).[1] 1909ஆம் ஆண்டில், இந்தியப் பெண்கள் கல்விச் சங்கத்தைக் தோற்றுவிக்க இவர் உதவினார். இது இந்தியப் பெண்களை பிரிட்டனுக்கு ஆசிரியர்களாகப் பயிற்றுவிக்க நிதி திரட்டவும் முயன்றது.[1]
பெண்கள் வாக்குரிமை
17 சூன் 1911 அன்று, பெண்கள் சமூக மற்றும் அரசியல் ஒன்றியம்[5] மகளிர் முடிசூட்டு ஊர்வலத்தை ஏற்பாடு செய்தது. ஐக்கிய இராச்சியத்தின் ஐந்தாம் ஜோர்ஜின் முடிசூட்டலைப் பயன்படுத்தி வாக்கெடுப்பை கோரியது.[6] ஒரு பிரிட்டிசு தேசிய அரசியல்வாதியாக இருந்த ஜேன் கோப்டனும் இவரும் ஊர்வலத்திற்கு முன்னதாக ஒரு சிறிய இந்தியக் கூட்டத்தை கூட்டினர்.[4] 'ஏகாதிபத்திய குழு'யின் ஒரு பகுதியை உருவாக்கி, பேரரசு முழுவதும் பெண்களின் வாக்குரிமைக்கான ஆதரவின் வலிமையைக் காட்ட விரும்பினர்.[5] ஊர்வலத்திலிருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தில் இவரும், திருமதி. பகவதி போலா நாயுத், திருமதி. லீலாவதி முகர்ஜியா (தனது மகள்) ஆகியோர் இடம் பெற்றிருந்தன்ர்.[3] பல வருடங்களுக்குப் பிறகு அணிவகுப்பில் தங்கள் இருப்பை, இந்திய அரசியல்வாதி சுஷாமா சென் இவ்வாறு நினைவு கூர்ந்தார்:
அந்த நேரத்தில் பெண்கள் வாக்குரிமைக்காக போராடிய பெண்கள் வாக்குரிமை இயக்கம் அதன் உச்சத்தில் இருந்தது. அந்த நாட்களில் இலண்டனில் சில இந்தியப் பெண்கள் இருந்தனர். நான் சொல்வதைக் கேட்டு, பிக்காடில்லி சர்க்கஸில் தங்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவும், திருமதி எம்மலின் பான்கர்ஸ்ட் தலைமையில் நாடாளுமன்ற மாளிகைக்கு அவர்களுடன் அணிவகுத்துச் செல்லவும் எனக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. . . இது எனக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் ஊர்வலத்தின் மத்தியில் ஒரு தனி இந்தியப் பெண்ணுக்கு இது ஒரு புதுமையான காட்சியாக இருந்தது. நான் பொதுப் பார்வையில் இருந்தேன்.[6]
ஆர்வலரும் இறையியலாளருமான அன்னி பெசன்ட் இந்திய வாக்காளர்களுடன் அணிவகுத்தார்.[5]
1912 மற்றும் 1913 ஆம் ஆண்டுகளில், இலண்டனிலும் கேம்பிரிசிலும் அரங்கேற்றப்பட்ட பல இந்திய நாடகங்களின் தயாரிப்பில் இலலிதா ராய் உதவினார். பாரம்பரிய ஆடைகளான தலைப்பாகையையும் புடவைகளையும் அணிந்து ஆலோசகர்களுக்கு உதவினார்.[1]
மேற்கோள்கள்
- ↑ 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Roy, Lolita [known as Mrs P. L. Roy] (b. 1865), social reformer and suffragist". Oxford Dictionary of National Biography (in ஆங்கிலம்). doi:10.1093/odnb/9780198614128.013.369120. Retrieved 2020-11-12.
- ↑ Hoque, Nikhat (2019-02-03). "Meet 7 Indian Suffragettes Of The British Suffrage Movement". Feminism In India (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2020-11-12.
- ↑ 3.0 3.1 "Bloomsbury Collections - Suffrage and the Arts - Visual Culture, Politics and Enterprise". www.bloomsburycollections.com. Retrieved 2020-11-12.
- ↑ 4.0 4.1 "Suffrage Stories: Black And Minority Ethnic Women: Is There A 'Hidden History'?". Woman and her Sphere (in ஆங்கிலம்). 2017-07-24. Retrieved 2020-11-12.
- ↑ 5.0 5.1 5.2 "Lolita Roy and Indian Suffragettes, Coronation Procession - Museum of London". Google Arts & Culture (in ஆங்கிலம்). Retrieved 2020-11-12.
- ↑ 6.0 6.1 "Black History Month: Diversity and the British female Suffrage movement". Fawcett Society (in ஆங்கிலம்). Retrieved 2020-11-12.