உயர்திணை
Jump to navigation
Jump to search
உயர்திணை (Audio file "Ta-உயர்திணை.ogg" not found) என்பது தமிழ் இலக்கணத்தில் தேவர், மாந்தர், நரகர் என்பவர்களை வகைப்படுத்தும் சொல்லாகும். இவர்களுக்கு உள்ளதெனக் குறிப்பிடப்படும் பகுத்தறிவு குறித்து இவ்வுயர்திணை என்ற பெயர் இடப்பட்டிருக்கலாம். பகுத்தறிவில்லாத உயிரினங்களும் உயிரற்ற பொருட்களும் அஃறிணை என்று பிரிக்கப்படும்.
உயர்திணை என்மனார் மக்கட்சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள்,தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. 26 வகை விரவுப்பெயர்களைக் காணலாம்.[1]
மேற்கோள்கள்
- ↑ http://www.tamilvu.org/testsite/html/justify.htm பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை