கிருஷ்ணப்பருந்து
Jump to navigation
Jump to search
கிருஷ்ணப்பருந்து ஆ. மாதவன் எழுதிய தமிழ் நாவல். 1974ல் வெளிவந்தது. மாதவனின் மிகச்சிறந்த நாவலாக இது கருதப்படுகிறது.
திருவனந்தபுரம் சாலை கடைத்தெருவை பின்னணியாகக் கொண்ட படைப்பு. இது துறவு வாழ்க்கை வாழும் ஒருவருக்கும் அவரை நம்பி வாழும் ஒரு குடும்பத்திற்கும் உள்ள உறவைச் சித்தரிப்பது. குறிப்பாக ராணி என்ற பெண் மீது சாமியாருக்கு ஆழத்தில் ஓர் காம விழைவு உள்ளது. அது ஒரு தருணத்தில் வெளிப்படுகிறது. சாமியார் தன்னை தானே கண்டுகொள்ளும் தருணமாக அது உள்ளது. அவரது காம விழைவை குறியீடுகள் மூலம் நுட்பமாகச் மாதவன். இந்நாவலில் கூறியுள்ளார்.