குறள் பீடம் விருது
Jump to navigation
Jump to search
குறள் பீடம் விருது என்பது இந்திய அரசு நிறுவனமான செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் மூலம் ஆண்டுதோறும் இந்தியத் தமிழறிஞர் ஒருவருக்கும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவருக்கும் அளிக்கப்படும் விருதாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழியல் ஆய்வில் ஈடுபட்டு ஒப்பிலாப் பங்களிப்பை வழங்கியுள்ள இந்தியத் தமிழறிஞர் ஒருவரும், பிற நாட்டுத் தமிழறிஞர் ஒருவரும் தேர்வு செய்யப் பெற்று, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழும், நினைவுப் பரிசும், ஒவ்வொருவருக்கும் 5 இலக்கம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படுகிறது.
குறள் பீடம் விருது விருது பெற்றவர்கள் விபரம் :
- 2009-2010 - யாரொசுலாவ் வாசெக் (செக் குடியரசு)
- 2010-2010 - ஜான் ரால்ஸ்டன் மார் (இங்கிலாந்து)