கோய்னா அணை
Jump to navigation
Jump to search
| கொய்னா அணை | |
|---|---|
| உரிமையாளர்(கள்) | மகாராட்டிர அரசு |
கோய்னா அணை இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் சாத்தாரா மாவட்டத்தில் பாயும் கோய்னா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையாகும். கோய்னா நீர் மின்சார திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது கோய்னா அணையாகும்[1]. இந்த பெரிய அணை நான்கு அணைகளை உள்ளடக்கியது. 1920 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்டது. திட்ட மின்சார உற்பத்தி நான்கு நிலைகளில் நடைபெறுகிறது.10 திசம்பர் 1967 ம் ஆண்டு அணையில் நிரம்பிய நீ்ர்மட்டத்தினால் நிலநடுக்கம் ஏற்பட்டு 200 பேர் இறப்பு,1500 பேருக்கு காயம் முதலியன ஏற்பட்டது.1500 கி.மீ அளவிற்கு சுற்றுப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.நிலநடுக்க நடுவத்தில் 7.5 மாக்னடியுட் அளவில் ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டது.மகாராஷ்டிராவின் முக்கியமான அணைகளில் இதுவும் ஒன்றாகும்.[2]
மேற்கோள்
- ↑ "Electricity in India - Sources, Generation, Usage of Power in india". india-reports.com. Archived from the original on 2011-10-18.
- ↑ "Koyna Sanctuary Plundered". downtoearth.org.in. January 31, 2011. Retrieved November 14, 2011.