சி. சபாபதி
சி. சபாபதி (C. Sabapathy) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் தருமபுரி மாவட்டம் அரூர் பகுதியினைச் சேர்ந்தவர். அரூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை கல்வி பயின்றுள்ளார். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்த இவர், 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் அரூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
சி. சபாபதி | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1980–1984 | |
| முன்னையவர் | எம். அண்ணாமலை |
| பின்னவர் | ஆர். இராஜமாணிக்கம் |
| தொகுதி | அரூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 10 ஏப்ரல் 1942 |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் |
| தொழில் | விவசாயி |