செந்தணல் (இதழ்)
Jump to navigation
Jump to search
செந்தணல் இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 1980களில் வெளிவந்த ஓர் இதழாகும். அடுப்போடு வாழ்ந்த நெருப்புக்கள் நாங்கள். எரிப்பதற்காக எடுத்து வருகின்றோம் என்ற பணிக்கூற்றுடன் வெளிவந்த இவ்விதழ் ஈழம் பெண்கள் விடுதலை முன்னணியின் உத்தியோகபூர்வ இதழாக அமைந்திருந்தது.
உள்ளடக்கம்
தமிழீழ விடுதலை தொடர்பான பல்வேறு செய்திகள், உணர்வூட்டும் ஆக்கங்கள், இப் போராட்டத்திற்கு பெண்களின் பங்களிப்புகள், பெண் விடுதலைப் போராளிகள் போன்ற பல்வேறு செய்திகளும், ஆக்கங்களும் இவ்விதழில் உள்ளடக்கப்பட்டிருந்தன.