சேரமான் இளங்குட்டுவன்
Jump to navigation
Jump to search
சேரமான் இளங்குட்டுவன் சங்ககாலப் புலவர். இவரது பாடல் ஒன்றே ஒன்று உள்ளது. அது அகநானூறு 153. பாலைத்திணை.
பாடல் சொல்லும் செய்தி
மகளை அவளது காதலனுடன் வழியனுப்பி வைத்துவிட்டுச் செவிலி இவ்வாறு எண்ணிக் கவலை கொள்கிறாள்.
அவள் பந்தாட்டத்தில் பந்தின் பின் செல்வதற்கே அடி நோகிறது என்று அன்று சொன்னாள். அவளது அந்த நல்லடிகள், மூங்கில் தீ வெடித்துச் சிதறும் வழியில் சுட்டெரிக்கும் வெயிலில் அவனுடன் செல்லும் வலிமை உள்ளனவோ?