ஜீவநதி (சிற்றிதழ்)
Jump to navigation
Jump to search
![]() | |
இதழாசிரியர் | கலாமணி பரணீதரன் |
---|---|
வகை | இலக்கியம் |
இடைவெளி | மாதம் ஒரு முறை |
முதல் வெளியீடு | ஆகத்து 5, 2007 |
நாடு | இலங்கை |
ஜீவநதி (Jeevanathy) யாழ்ப்பாணத்திலிருந்து மாதாந்தம் வெளிவரும் தமிழ் இலக்கியச் சிற்றிதழ் ஆகும்.
ஜீவநதியின் வைகாசி, 2012 இதழ் ஆத்திரேலியச் சிறப்பிதழாக வெளியிடப்பட்டுள்ளது.
முதலாவது இதழ்
ஆகத்து 5, 2007 அன்று ஜீவநதியின் முதலாவது இதழ் வெளியாகியது.
நடப்பிக்கை
ஜீவநதியின் முதன்மை ஆசிரியர் கலாமணி பரணீதரன் ஆவார். துணை ஆசிரியர் வெற்றிவேல் துசியந்தன் ஆவார்.[1] பதிப்பாசிரியர் த. கலாமணி ஆவார். ஆலோசகர்களாகத் தெணியான், கி. நடராசா ஆகியோர் உள்ளனர்.
உள்ளடக்கம்
சிறுகதைகள், கவிதைகள், இலக்கியக் கட்டுரைகள், நேர்காணல்கள், புதுப் புனல், கலை இலக்கிய நிகழ்வுகள், திறனாய்வுக் கட்டுரைகள், பேசும் இதயங்கள் போன்றவை இச்சஞ்சிகையில் வெளிவருகின்றன.[2]
விருதுகள்
- கு. சின்னப்பபாரதி அறக்கட்டளை இலக்கிய விருதுகள் 2012 ( ஈழத்தில் இருந்துவரும் சிறந்த சிற்றிதழ் சஞ்சிகைக்காக இந்தியாவில் பெற்றுக்கொண்டது)[3]
- இனிய மணா இலக்கிய விருது (2010, சிறந்த சிற்றிதழுக்காக இந்தியாவில் பெற்றுக்கொண்டது)[4]
ஜீவநதி வெளியீடுகள்
ஜீவநதி பிரசுரப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது. ஜீவநதி வெளியீடுகளாக வெளிவந்த நூல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- பாட்டுத்திறத்தாலே...
- மனதில் உறுதி வேண்டும்[5]
- நதியில் விளையாடி...
- வெறிச்சோடும் மனங்கள்[6]
- எண்ணிலாக்குணமுடையோர்[7]
- மீண்டும் துளிர்ப்போம்...[8]
- ஜீவநதி நேர்காணல்கள்
- இலக்கியமும் எதிர்காலமும்[9]
- முன்னோர் சொன்ன கதைகள்
- மொழிபெயர்க்கப்படாத மௌனங்கள்
- கவியில் உறவாடி...
- இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு[10]
- ஜீவநதி அரங்கக் கட்டுரைகள்
- இந்த நிலம் எனது
- இருட்தேர்
- மான சஞ்சாரம்
- என் கடன்[11]
- கட்டடக்கா (கூ)ட்டு முயல்கள் சிறுகதை தொகுப்பு (வ.ந.கிரிதரன்)
இதையும் பார்க்க
மேற்கோள்கள்
- ↑ ["ஒரு சில தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான முயற்சி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2011-10-20. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09. ஒரு சில தமிழ்க் கவிதைகளை மொழிபெயர்ப்பதற்கான முயற்சி (ஆங்கில மொழியில்)]
- ↑ "ஜீவநதி 2008.07-08". Archived from the original on 2020-08-10. பார்க்கப்பட்ட நாள் 2016-03-09.
- ↑ விருதுகள் - 2012 தினமணி, 3rd October 2012
- ↑ விருதுகள் - 2010[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பெண் அடிமைத் தனத்திற்கு எதிராக குரல் கொடுப்போம் [தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ வெறிச்சோடும் மனங்கள்
- ↑ எண்ணிலாக்குணமுடையோர்
- ↑ மீண்டும் துளிர்ப்போம்
- ↑ கலாமணி பரணீதரனின் மீண்டும் துளிர்ப்போம்
- ↑ இருபாலை சேனாதிராய முதலியார் ஆக்கிய ஆக்கங்கள் சிலவற்றின் தொகுப்பு
- ↑ யாழ். இலக்கிய வட்டத்தின் 'என் கடன்' நூல் வெயீடும் விருது வழங்கலும்