டல்ஹவுசி பிரபு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
டல்ஹவுசி பிரபு
இந்தியத் தலைமை ஆளுநர்
பதவியில்
1848–1856
ஆட்சியாளர்விக்டோரியா மகாராணி
முன்னையவர்விஸ்கவுண்ட் ஹார்டிங் பிரபு
பின்னவர்கானிங் பிரபு
வணிகக் குழுவின் தலைவர்
பதவியில்
5 பிப்ரவரி 1845 – 27 சனவரி 1846
ஆட்சியாளர்Victoria
பிரதமர்இராபர்ட் பீல்
முன்னையவர்வில்லியம் கிளாட்ஸ்டோன்
பின்னவர்கிளாரண்டைன் பிரபு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு22 April 1812 (1812-04-22)
டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன்
இறப்பு19 December 1860 (1860-12-20)
டல்ஹவுசி கோட்டை, மிட்லொதைன்
குடியுரிமைபிரித்தானியா மற்றும் அயர்லாந்து
தேசியம்ஸ்காட்லாந்து
துணைவர்Lady Susan Hay (d. 1853)
முன்னாள் மாணவர்கிறிஸ்துவ சபை, ஆக்ஸ்போர்டு

ஜேம்ஸ் ஆண்ட்ரூ பி ரௌன்-ராம்சே என்ற இயற்பெயர் கொண்ட டல்ஹவுசி பிரபு (James Andrew Broun-Ramsay, 1st Marquess of Dalhousie: 22 ஏப்ரல் 1812–19 டிசம்பர் 1860), ராம்சே பிரபு எனவும் ஏர்ல் ஆப் டல்ஹவுசி எனவும் அழைக்கப்பட்ட ஒரு இசுக்காட்லாந்தியர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவின் காலனித்துவ நிர்வாகியாவார். டல்ஹவுசி 1848 இலிருந்து 1856 வரை இந்தியாவின் இந்தியத் தலைமை ஆளுநராகப் பணியாற்றினார். கிழக்கிந்தியக் கம்பெனியின் விதிகளுக்குப் புறம்பாக இந்தியாவில் நிர்வாகம் செய்து ஆங்கிலேய ஆட்சியை விரிவு செய்தவராவார். இவரது நிர்வாகத் திறமை, இவருக்குப் பின் இந்தியாவை ஆண்ட ஆளுநர்களுக்கு ஒரு வழிகாட்டியாய் அமைந்தது.[1]

அவகாசியிலிக் கொள்கை

இவர் அறிமுகப்படுத்திய அவகாசியிலிக் கொள்கையின் படி, ஆண் வாரிசு இன்றி இறந்த இந்திய இந்திய சுதேச மன்னர்களின் இராச்சியங்கள், கிழக்கிந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்ப்பட்டது. அவ்வாறு இணைக்கப்பட்ட இராச்சியங்களில் தஞ்சாவூர் மராத்திய அரசு ஒன்றாகும்.

இதனையும் காண்க

இதனையும் காண்க

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=டல்ஹவுசி_பிரபு&oldid=382695" இலிருந்து மீள்விக்கப்பட்டது