தணத்தல்
Jump to navigation
Jump to search
தணத்தல் என்பது சஙக இலக்கியத்தில் தலைவனும் தலைவியும் பிரிந்திருத்தல். இதனை 'ஒருவழித் தணத்தல்' என்பர். இந்தப் பிரிவுக்குக் காரணம் இல்லை. தற்செயலாக நிகழும். காலமும் இல்லை. (மணத்தல் என்பது தலைவனும் தலைவியும் கூடியிருத்தல்)
சங்கப் பாடல்களில் குறிப்புகள்
- புலவர் வெள்ளிவீதியார் தணத்தல் பற்றிக் குறிப்பிடுகிறார். (குறுந்தொகை 386)
- குறியிடம் பிழைத்தல், காலம் கனியாமை முதலான காரணங்களால் இப் பிரிவு நேரும் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. (நூற்பா 1053)
- 'ஒருவழித் தணத்தற்குப் பருவம் கூறார்' என்று இதனை நம்பி அகப்பொருள் விளக்கம் குறிப்பிடுகிறது. (நூற்பா 40)