பஞ்சபாரதீயம்
Jump to navigation
Jump to search
பஞ்சபாரதீயம் என்பது ஒரு தமிழிசை நூலாகும். இந்த நூல் இன்று பெயரளவில் மட்டும் உள்ளது. அடியார்க்கு நல்லார் சிலப்பதிகாரம் கானல்வரி பகுதிக்கு உரை எழுதும்போது குறிப்பிடும் நூல்களில் இது ஒன்று. இந் நூலை நாரதர் என்பவர் இயற்றினார் என்று அடியார்க்கு நல்லார் தன் உரையில் குறிபிடுகிறார்.
தன் உரையில் அடியார்க்கு நல்லார் இந்த நூலில் இருந்து இசை இலக்கணச் சூத்திரம் ஒன்றை மேற்கோளாக சுட்டுகிறார். அது பின்வருமாறு:[1]
| “ | இன்னிசை வழியதன்றி யிசைத்தல்செம் பகையதாகும் சொன்னமாத் திரையினோங்க விசைத்திடுஞ் சுருதியார்ப்பே |
” |
மேற்கோள்கள்
கருவிநூல்
- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பன்னிரண்டாம் நூற்றாண்டு, இரண்டாம் பாகம், பதிப்பு 2005