பயனிலை
Jump to navigation
Jump to search
தமிழ் இலக்கணப்படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை எனப்படும். ஒரு சொற்றொடரில் பொருள் முடிந்து நிற்கும் வினைச் சொல்லின் வினை முற்று நிலை பயனிலை எனப்படுகிறது.[1] எடுத்துக்காட்டாக, கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில் விளையாடினான் பயனிலை ஆகும்.