ரோஜா முத்தையா
Jump to navigation
Jump to search

ரோஜா முத்தையா என்பவர் அடிப்டையில் ஓர் ஓவியர் ஆவார். இவரது சொந்த ஊர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோட்டையூர் ஆகும். “ரோஜா ஆர்ட்சு” என்னும் கலைக்கூடத்தின் நிறுவனர். தன் சொந்த முயற்சியால் பல்லாயிரக்கணக்கான அரிய நூல்களைச் சேகரித்துப் பேணினார்.[1] சென்னை, தரமணியில் உள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மறைந்த இவரின் பெயரால் அமைந்துள்ளது. இந்நூலகத்தைச் சிக்காகோ பல்கலைக்கழகத்தினர் ஊக்கத்தொகை அளித்துப் பராமரித்து வருகின்றனர்.
மேற்கோள்கள்
- ↑ ஆனந்த விகடனின் பொக்கிஷம் பகுதியில் வெளியான செய்தி