விளாதிமிர்-சுசுதால்
Jump to navigation
Jump to search
விளாதிமிர்-சுசுதால் (Vladimir-Suzdal) என்பது 12ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கீவ உரூசுக்கு பின் வந்த முதன்மை வேள் பகுதிகளில் ஒன்றாகும். இது கிலையசமா மீதான விளாதிமிர் நகரத்தை மையமாகக் கொண்டிருந்தது. காலப்போக்கில் பல்வேறு சிறிய வேள் பகுதிகளாக பிரிக்கப்பட்ட ஒரு பெரிய வேள் பகுதியாக இது வளர்ச்சியடைந்தது. மங்கோலியப் பேரரசால் வெல்லப்பட்டதற்குப் பிறகு அதன் சொந்த உயர் குடியினரால் தலைமை தாங்கப்பட்ட சுயாட்சி கொண்ட அரசாக இந்த வேள் பகுதி உருவானது. எனினும் வேள் பகுதியின் ஆளுநர் பதவியானது தங்க நாடோடிக் கூட்டத்தால் (கானால்) வெளியிடப்பட்ட ஜர்லிக்கால் உருரிக் அரசமரபின் இறையாண்மையுள்ள ஆட்சியாளருக்கு வழங்கப்பட்டது.[1]