விழிகட் பேதைப் பெருங்கண்ணனார்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
தளவம் (செம்முல்லை)

விழிக்கட் பேதைப் பெருங்கண்ணனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். நற்றிணை 242 எண் கொண்ட ஒரே ஒரு பாடல் மட்டும் இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் காணக் கிடக்கிறது. அது சொல்லும் செய்தி வருமாறு:

கார்காலம் வந்ததும் திரும்புவேன் என்று தன் காதலிக்கு வாக்களித்த தலைவன் தன் வாக்குத் தவறாமல் திரும்ப எண்ணித் தன் தேரை இல்லம் நோக்கித் திருப்புமாறு தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான்.

பிடவம் - இலையே இல்லாமல் உதிர்ந்து பூத்திருக்கிறது.
தளவம் - புதரில் படர்ந்து பூத்துக் கிடக்கிறது.
கொன்றை - பொன் போலப் பூத்திருக்கிறது.
காயா - சின்னக் கிளைகளில் பூத்திருக்கிறது.
கார்காலம் வந்துவிட்டது.

நம் தேரைக் கண்டு, அதோ பார், பெண்மான் களர்நிலத்தில் ஓடிவிட அதன் ஆண்மான் அதனைத் தேடிக்கொண்டிருக்கிறது.