வை. ச. சுந்தர்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வைகளத்தூர் சங்கர் சுந்தர்
பிறப்பு6 ஏப்ரல் 1952
துறைதுணைக்காரணிகள், செயலி இயற்கணிதங்கள், சார்புப் பகுப்பாய்வு
பணியிடங்கள்இந்தியப் புள்ளியியல் நிறுவனம், கணித அறிவியல் நிறுவனம், சென்னை
கல்வி கற்ற இடங்கள்ஐஐடி மெட்ராஸ், இண்டியானா பல்கலைக்கழகம் ப்ளூமிங்டன்
ஆய்வு நெறியாளர்பால் ஹால்மோஸ்
விருதுகள்சாந்தி ஸ்வரூப் பட்நாகர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பரிசு

வைகளத்தூர் சங்கர் சுந்தர் (Vaikalathur Shankar Sunder) (பிறப்பு: 6 ஏப்ரல் 1952) இந்திய கணிதவியலாளர் ஆவார். இவர் துணைக்காரணிகள், செயலி இயற்கணிதங்கள் மற்றும் செயலியல் பகுப்பாய்வு போன்ற துறைகளில் சிறப்பு பெற்றவர். 1996ஆம் ஆண்டு, கணித அறிவியல் துறையில் செய்த பங்களிப்புகளுக்காக, இந்தியாவின் உயரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது இவருக்கு வழங்கப்பட்டது. சுந்தர் இந்தியாவின் ஆரம்பகால செயலி இயற்கணிதம் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இவர் சுமார் அறுபது ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டதுடன், ஆறு நூல்களையும் எழுதியுள்ளார். இவற்றில் மூன்று நூல்கள் வான் நியூமன் இயற்கணிதங்கள் குறித்து உயர்நிலைப் படிப்புகளுக்கான விரிவான ஆய்வுநூல்களாகும். இவர் ஒரு நூலை வான் ஜோன்சுடன் இணைந்து எழுதியுள்ளார். இவர் ஃபீல்ட்ஸ் பதக்கம் பெற்றவர் ஆவார். சுந்தர், 1977ஆம் ஆண்டு புளூமிங்டன்னில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.[1][2]

மேற்கோள்கள்

  1. Sukumar Mallick; Saguna Dewan; S C Dhawan (1999). Handbook of Shanti Swarup Bhatnagar Prize Winners (1958–1998) (PDF). New Delhi: Human Rsource Development Group, Council of Scientific & Industrial Research. p. 118.
  2. Professor Sunder at the Mathematics Genealogy Project.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=வை._ச._சுந்தர்&oldid=504626" இலிருந்து மீள்விக்கப்பட்டது