ஹரிநாராயணன்
Jump to navigation
Jump to search
ஹரிநாராயணன்
இயற்பெயர்/ அறியும் பெயர் |
ஹரிநாராயணன் |
---|---|
பிறந்ததிகதி | 25 டிசம்பர் 1980 |
அறியப்படுவது | எழுத்தாளர் |
பெற்றோர் | ஜானகிராமன் பத்மாவதி |
ஹரிநாராயணன் இணையத்திலும், அச்சு ஊடகங்களிலும் பத்மஹரி என்ற பெயரில் எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர் ஆவார்.
இளைமைக்காலம் கல்வியறிவு
இவர் 1980 டிசம்பர் 25ல் ஜானகிராமன், பத்மாவதி தம்பதியருக்கு மகனாக கடலூர் மாவட்டத்திலுள்ள மேலிருப்பு கிராமத்தில் பிறந்தார். வாய் புற்றுநோய் முதுநிலை ஆய்வாளராக பணியாற்றும் இவர், அறிவியல் மற்றும் கல்வித்துறையில் இளங்கலை பட்டம், உயிர்தொழில்நுட்பவியலில் முதுகலை பட்டம் ஆகியவற்றோடு மருத்துவத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
நூல்கள்
மருத்துவம் சம்பந்தமான இவரது இரு நூல்கள் பிளாக்ஹோல் மீடியா பப்ளிகேஷன்ஸால் வெளியிடப்பட்டுள்ளன.
- பாலியல்: இன்றைய ஆய்வுகள் கூறுவது என்ன? [1]
- ஏன் உருவாகிறது புற்றுநோய்?
படைப்புகள்
தினத்தந்தி இளைஞர் இதழ், ஆனந்தி இதழ் ஆகியவற்றில் இவர் எழுதிய மருத்துவக் கட்டுரைகள் தொடர்களாக வெளிவந்துள்ளன.
ஆதாரம்
- ↑ http://www.dinamani.com/book_reviews/article992681.ece?service=print தினமணி இதழ் டிசம்பர் 20, 2010