சே குவேரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Born month june |
No edit summary |
||
வரிசை 36:
அவரது வயது அதிகரித்த போது, அவருக்கு [[இலத்தீன் அமெரிக்கா|இலத்தீன் அமெரிக்க]] எழுத்தாளர்களான [[ஹோராசியோ குயிரோகா|குயிரோகா]], [[சிரோ அலெக்ரியா|அலெக்ரியா]], [[ஜோர்க் இக்காசா|இக்காசா]], [[ரூபென் டாரியோ|டாரியோ]], [[மிகுவேல் ஆஸ்டூரியாஸ்|ஆஸ்டூரியாஸ்]] போன்றோருடைய ஆக்கங்களின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. செல்வாக்கு மிக்க தனி நபர்களின் கருத்துருக்கள், வரைவிலக்கணங்கள், மெய்யியற் கருத்துக்கள் போன்றவற்றை எழுதிவந்த குறிப்புப் புத்தகத்தில் இவர்களுடைய கருத்துக்களையும் அவர் குறித்து வந்தார். இவற்றுள், [[புத்தர்]], [[அரிஸ்ட்டாட்டில்]] என்போர் பற்றிய ஆய்வுக் குறிப்புகள், [[பேட்ரண்ட் ரஸ்ஸல்|பேட்ரண்ட் ரஸ்ஸலின்]] அன்பு, தேசபக்தி என்பன குறித்த ஆய்வு, [[ஜாக் லண்டன்|ஜாக் லண்டனின்]] சமூகம் பற்றிய கருத்துக்கள், [[பிரடெரிக் நீட்சே|நீட்சேயின்]] இறப்பு பற்றிய எண்ணங்கள் என்பனவும் அடங்கியிருந்தன. சிக்மண்ட் பிராய்டின் ஆக்கங்களாலும் கவரப்பட்ட சே குவேரா, அவரைப் பல வேளைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்.
1948 ஆம் ஆண்டில் மருத்துவம் படிப்பதற்காக சேகுவேரா, [[புவனஸ் அயர்ஸ்]] பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். ஆனால் 1951 ஆம் ஆண்டில் படிப்பில் இருந்து ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு, அவரது நண்பரான ஆல்பர்ட்டோ கிரெனாடோவுடன் சேர்ந்து கொண்டு, [[மோட்டார் ஈருருளி]]யில் தென்னமெரிக்கா முழுதும் பயணம் செய்தார். [[பெரு]] நாட்டில் அமேசான் ஆற்றங்கரையில் இருந்த [[தொழுநோய்|தொழுநோயாளர்]] குடியேற்றம் ஒன்றில் சில வாரங்கள் தொண்டு செய்வது அவரது இப்பயணத்தின் இறுதி நோக்கமாக இருந்தது. இப்பயணத்தின் போது அவர் எடுத்த குறிப்புக்களைப் பயன்படுத்தி "மோட்டார் ஈருருளிக் குறிப்புகள்" (The Motorcycle Diaries) என்னும் தலைப்பில் நூலொன்றை எழுதினார். இது பின்னர் நியூ யார்க் டைம்சின் அதிக விற்பனை கொண்ட நூலாகத் தெரிவு செய்யப்பட்டது. பின்னர், 2004 இல், இதே பெயரில் எடுக்கப்பட்ட திரைப்படம்<ref>The Motorcycle Diaries திரைப்படம் = http://www.imdb.com/title/tt0318462/</ref> விருதுகளையும் பெற்றது.
பரவலான வறுமை, அடக்குமுறை, வாக்குரிமை பறிப்பு என்பவற்றை இலத்தீன் அமெரிக்கா முழுதும் கண்ணால் கண்டதினாலும், மார்க்சிய நூல்களின் செல்வாக்கும் ஒன்று சேர ஆயுதம் ஏந்திய புரட்சி மூலமே சமூக ஏற்றத் தாழ்வுகளுக்குத் தீர்வு காண முடியும் என சே குவேரா நம்பலானார். பயணத்தின் முடிவில், இவர், இலத்தீன் அமெரிக்காவைத் தனித்தனி நாடுகளாகப் பார்க்காமல், ஒட்டு மொத்தமான கண்டம் தழுவிய விடுதலைப் போர் முறை தேவைப்படும் ஒரே பகுதியாகப் பார்த்தார். எல்லைகளற்ற [[ஹிஸ்பானிய அமெரிக்கா]] என்னும் சே குவேராவின் கருத்துரு அவரது பிற்காலப் புரட்சி நடவடிக்கைகளில் தெளிவாக வெளிப்பட்டது. ஆர்ஜெண்டீனாவுக்குத் திரும்பிய சேகுவேரா தனது படிப்பை முடித்து 1953 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மருத்துவ டிப்ளோமாப் பட்டம் பெற்றார்.
[[படிமம்:Tree planted by Che Guevara.JPG|thumbnail|சே குவேரா இலங்கைக்கு சென்றபோது நாட்டிய மகோகனி மரம். இடம்: யகலகெல இறப்பர் தோட்டம், மெரககெகனை, கொரணை. ஆகத்து 8, 1959<ref>{{cite web | url=http://www.sundaytimes.lk/090906/Magazine/sundaytimesmagazine_03.html | title=A larger than life tree for larger than life man | accessdate=10 சூலை 2015}}</ref>]]
1953 ஜூலையில் மீண்டும் பயணமொன்றைத் தொடங்கிய சேகுவேரா, இம்முறை [[பொலீவியா]], [[பெரு]], [[ஈக்குவடோர்]], [[பனாமா]], [[கொஸ்தாரிக்கா]], [[நிக்கராகுவா]], [[ஹொண்டூராஸ்]], [[எல் சல்வடோர்]] ஆகிய நாடுகளுக்குச் சென்றார். அதே ஆண்டு டிசம்பரில் சேகுவேரா குவாதமாலாவுக்குச் சென்றார். அங்கே மக்களாட்சி அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் ஒன்றுக்குத் தலைமை தாங்கிய குடியரசுத் தலைவர் [[ஜாக்கோபோ ஆர்பென்ஸ் குஸ்மான்]] என்பவர் நிலச் சீர்திருத்தங்களின் மூலமும் பிற நடவடிக்கைகளாலும் பெருந்தோட்ட (latifundia) முறையை ஒழிப்பதற்கு முயன்று கொண்டிருந்தார். உண்மையான புரட்சியாளனாக ஆவதற்குத் தேவையான அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் குவேரா, குவாத்தமாலாவிலேயே தங்கிவிட முடிவு செய்தார்.
| |||