நாலடியார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam "{{சங்க இலக்கியங்கள்}} '''நாலடியார்''' பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிக..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Rasnaboy சி ஆங்கிலச் சொல்லாக்கம் |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{சங்க இலக்கியங்கள்}} |
{{சங்க இலக்கியங்கள்}} |
||
'''நாலடியார்''' [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. இது நான்கு அடிகளைக் கொண்ட [[வெண்பா]]க்களால் ஆனது. இது [[சமணம்|சமண]] முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது ''நாலடி நானூறு'' எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது [[திருக்குறள்|திருக்குறளையும்]] குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே [[தொகை நூல்]] நாலடியார் ஆகும். |
'''நாலடியார்''' (''Nalatiyar'') [[பதினெண் கீழ்க்கணக்கு]] நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு [[தமிழ் நீதி நூல்கள்|தமிழ் நீதி நூல்]]. இது நான்கு அடிகளைக் கொண்ட [[வெண்பா]]க்களால் ஆனது. இது [[சமணம்|சமண]] முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது ''நாலடி நானூறு'' எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான [[திருக்குறள்|திருக்குறளுக்கு]] இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது [[திருக்குறள்|திருக்குறளையும்]] குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே [[தொகை நூல்]] நாலடியார் ஆகும். |
||
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை [[உவமை|உவமைகளாகக்]] கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் [[ஜி.யூ.போப்]] மொழி பெயர்த்துள்ளார். |
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை [[உவமை|உவமைகளாகக்]] கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் [[ஜி.யூ.போப்]] மொழி பெயர்த்துள்ளார். |
||
| வரிசை 32: | வரிசை 32: | ||
:தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனதளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம். |
:தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனதளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம். |
||
<p align=right>(2. பொருட்பால், 2.14 கல்வி, 131) |
<p align=right>(2. பொருட்பால், 2.14 கல்வி, 131) |
||
<poem> |
|||
:இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் |
:இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால் |
||
:தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் |
:தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால் |
||
:எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல் |
:எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல் |
||
:மம்மர் அறுக்கும் மருந்து. |
:மம்மர் அறுக்கும் மருந்து. |
||
</poem> |
|||
:கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை. |
:கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை. |
||
<p align=right>2. பொருட்பால், 2.14 கல்வி, 132) |
<p align=right>2. பொருட்பால், 2.14 கல்வி, 132) |
||
<poem> |
|||
: உணர உணரும் உணர்வுடை யாரைப் |
: உணர உணரும் உணர்வுடை யாரைப் |
||
: புணரின் புணருமாம் இன்பம் - புணரின் |
: புணரின் புணருமாம் இன்பம் - புணரின் |
||
: தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப் |
: தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப் |
||
: பிரியப் பிரியுமாம் நோய். |
: பிரியப் பிரியுமாம் நோய். |
||
</poem> |
|||
<p align=right>(2.25 அறிவுடைமை, 247) |
<p align=right>(2.25 அறிவுடைமை, 247) |
||
<poem> |
|||
: கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் |
: கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும் |
||
: புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் |
: புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன் |
||
| வரிசை 53: | வரிசை 52: | ||
: சினமால் பொருத களத்து. |
: சினமால் பொருத களத்து. |
||
</poem> |
|||
<poem> |
|||
: நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று |
: நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று |
||
: நீரினுள் ஆரளவின்றே-சாரல் |
: நீரினுள் ஆரளவின்றே-சாரல் |
||
: கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு |
: கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு |
||
: பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே |
: பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே |
||
</poem> |
|||
- குறுந்தொகை 3 |
- குறுந்தொகை 3 |
||
07:20, 23 சனவரி 2025 இல் கடைசித் திருத்தம்
நாலடியார் (Nalatiyar) பதினெண் கீழ்க்கணக்கு நூல் தொகுப்பைச் சேர்ந்த ஒரு தமிழ் நீதி நூல். இது நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது. இது சமண முனிவர்களால் இயற்றப்பட்ட நானூறு தனிப்பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படுகிறது. இதனால் இது நாலடி நானூறு எனவும் பெயர் பெறும். 'வேளாண் வேதம்' என்ற பெயரும் உண்டு. பல நேரங்களில் இது புகழ் பெற்ற தமிழ் நீதி நூலான திருக்குறளுக்கு இணையாகப் பேசப்படும் சிறப்பைப் பெற்றுள்ளது.ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என்னும் பழமொழியில் நாலு என்பது நாலடியாரையும், இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் உள்ள ஒரே தொகை நூல் நாலடியார் ஆகும்.
வாழ்க்கையின் எளிமையான பொருட்களை உவமைகளாகக் கையாண்டு நீதி புகட்டுவதில் நாலடியார் தனித்துவம் பெற்று விளங்குகிறது. இந்நூலினை ஆங்கிலத்தில் ஜி.யூ.போப் மொழி பெயர்த்துள்ளார்.
கீழ்க்கணக்கு நூல்கள்
அறம், பொருள், இன்பம் என்னும் முப்பொருள்களையும் குறைந்த அடிகளில் சிறப்புற (நான்குஅடிகளுக்கு மிகாமல்) உரைப்பது பதினெண் கீழ்க்கணக்கு நூல்களின் இயல்பாகும். சங்ககாலச் சான்றோர்கள் பட்டறிந்த உண்மைகளையே பிற்காலப் புலவர்கள் நீதிக் கருத்துகளாகப் போற்றினர்.
நீதி நூல்களில் இலக்கியச் சுவையும் கற்பனையும் குன்றித் தோன்றினாலும் அவை மக்களின் வாழ்வைச் செம்மைப் படுத்தும் சீரிய தொண்டினைச் செய்கின்றன.
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறள், நாலடியார், நான்மணிக்கடிகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, திரிகடுகம், ஆசாரக்கோவை, சிறுபஞ்சமூலம், பழமொழி, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்கிற பதினொரு நூல்களும் நீதிநூல்களாகும்.
திருக்குறளும் நாலடியாரும்
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது. திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது. திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும். நாலடியாரைத் தொகுத்து, அதிகாரம் வகுத்தவர் பதுமனார். முப்பாலாகப் பகுத்தவர் தருமர். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஐ ஒட்டிய காலம்).
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையைத் திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.
நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 240 பாடல்கள் (24 அதிகாரங்கள்) காமத்துப்பால் : 30 பாடல்கள் (3 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
எடுத்துக்காட்டு பாடல்கள்
- குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
- மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
- நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
- கல்வி அழகே அழகு.
- தலைமயிரைச் சீர்படுத்தி முடிப்பதால் வரும் அழகும், முந்தானையில் கரையிட்ட அழகும், மஞ்சள் பூசுவதால் உண்டாகும் அழகும் உண்மை அழகல்ல. மனதளவில் உண்மையாக நடந்துகொள்கிறோம் என்னும் நடுவு நிலையாம் ஒழுக்க வாழ்க்கையைத் தரும் கல்வி அழகே மிக உயர்ந்த அழகாம்.
(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)
- இம்மை பயக்குமால் ஈயக் குறைவின்றால்
- தம்மை விளக்குமால் தாமுளராக் கேடின்றால்
- எம்மை யுலகத்தும் யாம்காணோம் கல்விபோல்
- மம்மர் அறுக்கும் மருந்து.
- கல்வி இவ்வுலக இன்பத்தைத் தரும்; பிறர்க்குத் தருவதால் குறையாது; (கற்றவர்) புகழை எங்கும் பரவச் செய்யும்; (தாம்) உயிரோடு இருக்கும்வரை அழியாது. ஆதலால் எந்த உலகத்திலும் கல்வியைப் போல அறியாமையைப் போக்கும் மருந்தை யாம் கண்டதில்லை.
2. பொருட்பால், 2.14 கல்வி, 132)
- உணர உணரும் உணர்வுடை யாரைப்
- புணரின் புணருமாம் இன்பம் - புணரின்
- தெரியத் தெரியும் தெரிவிலா தாரைப்
- பிரியப் பிரியுமாம் நோய்.
(2.25 அறிவுடைமை, 247)
- கொல்யானை பாயக் குடைமுருக்கி யெவ்வாயும்
- புக்கவா யெல்லாம் பிணம்பிறங்கத் - தச்சன்
- வினைபடு பள்ளிறிய் றோன்றும் செங்கட்"
- சினமால் பொருத களத்து.
- நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
- நீரினுள் ஆரளவின்றே-சாரல்
- கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
- பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
- குறுந்தொகை 3
மொழிபெயர்ப்பு
ஆங்கிலத்தில் ஜி.யூ.போப்பால் மொழிபெயர்க்கப்பட்டது இந்நூல்.