தேரழுந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
"{{ இந்திய அதிகார அமைப்புகள் தகவல்பெட்டி| நகரத்தின் பெயர் = தேரழுந்தூர் | வகை = கிராமம் | latd =11.02 | longd =79.35 | மாநிலம்=தமிழ் நாடு| மாவட்டம்= மயிலாடு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>பாஸ்கர் துரை தமிழைச் செம்மை செய்தல். வாழ்க தமிழ் வளர்க |
||
| வரிசை 31: | வரிசை 31: | ||
தேரழுந்தூர் சங்ககாலத்தில் அழுந்தூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. புலவர் [[பரணர்]] இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார். |
தேரழுந்தூர் சங்ககாலத்தில் அழுந்தூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. புலவர் [[பரணர்]] இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார். |
||
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் [[கரிகாலன்|கரிகாலனை]] [[வேளிர் (தமிழகம்)|11 வேளிர்]] ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். |
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் [[கரிகாலன்|கரிகாலனை]] [[வேளிர் (தமிழகம்)|11 வேளிர்]] ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்க்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன. |
||
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/Jun/24/%25E0%25AE%2586%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF-%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-3868113.html |title=ஆமருவி அமரர் கோமான் |website=Dinamani |language=ta |access-date=2025-02-27}}</ref> இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம். |
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.<ref>{{Cite web |url=https://www.dinamani.com/weekly-supplements/vellimani/2022/Jun/24/%25E0%25AE%2586%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AF%2581%25E0%25AE%25B5%25E0%25AE%25BF-%25E0%25AE%2585%25E0%25AE%25AE%25E0%25AE%25B0%25E0%25AE%25B0%25E0%25AF%258D-%25E0%25AE%2595%25E0%25AF%258B%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25A9%25E0%25AF%258D-3868113.html |title=ஆமருவி அமரர் கோமான் |website=Dinamani |language=ta |access-date=2025-02-27}}</ref> இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம். |
||
19:02, 15 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| தேரழுந்தூர் | |||||||
| — கிராமம் — | |||||||
| ஆள்கூறு | 11°01′N 79°21′E / 11.02°N 79.35°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ் நாடு | ||||||
| மாவட்டம் | மயிலாடுதுறை | ||||||
| வட்டம் | குத்தாலம் | ||||||
| ஆளுநர் | |||||||
| முதலமைச்சர் | |||||||
| ஊராட்சி மன்ற தலைவர் சின்ன.சிவகுமார் | [1] | ||||||
| மக்கள் தொகை | 9,533 (2001[update]) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
தேரழுந்தூர் அல்லது திருவழுந்தூர் (Therizhandur) என்பது தமிழ்நாட்டின் சோழ நாட்டுக் காவிரித் தென்கரையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் வட்டம் மற்றும் குத்தாலம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும். இது தேரழுந்தூர் ஊராட்சியால் நிருவகிக்கப்படுகிறது.
பெயராய்வு
சங்க காலத்திலிருந்து அழுந்தூர் என்று என்று அறியப்பட்ட இந்த ஊர் பாடல் பெற்ற தலமானதால் திரு என்ற முன்னொட்டுச் சேர்த்து திருவழுந்தூர் என்று பிற்காலத்தில் வழங்கப்பட்டது. திருவழுந்தூர் என்பது பின்னர் தேரழுந்தூர் என்று மருவியது.
அமைவிடம்
இந்த ஊர் மயிலாடுதுறைக்கு தெற்கே 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மயிலாடுதுறை, கும்பகோணம் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்துகளில் தேரழுந்தூர் செல்லலாம். மயிலாடுதுறை – கும்பகோணம் தொடர் வண்டிப் பாதையில் உள்ள தேரழுந்தூர் தொடருந்து நிலையத்தில் இறங்கி தெற்கே 4 கி.மீ. தொலைவில் இந்த ஊர் உள்ளது. இவ்வூர் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி யையும், பூம்புகார் (சட்டமன்றத் தொகுதி) யையும் சேர்ந்தது. தேரழுந்தூர் மேலையூர், கீழையூர், தொழுதாலங்குடி ஆகிய 4 பஞ்சாயத்துக்களைக் கொண்ட மிகப்பெரிய ஊராகும். சுமார் 9533 மக்கள் தொகை கொண்ட கிராமம் ஆகும். இதன் எல்லையாக கிழக்கில் அசிக்காடும், மேற்கில் திருவாவடுதுறையும், வடக்கில் குத்தாலமும் தெற்கில் கோமலும் அமைந்து உள்ளது.
ஊர் சிறப்பு
தேரழுந்தூர் சங்ககாலத்தில் அழுந்தூர் என்ற பெயரில் சிறப்புடன் விளங்கியது. புலவர் பரணர் இதனைத் தம் பாடலில் (அகநானூறு 245) குறிப்பிட்டுள்ளார்.
வெண்ணிவாயில் என்னுமிடத்தில் வேந்தன் கரிகாலனை 11 வேளிர் ஒன்று கூடித் தாக்கினர். இவர்கள் 11 பேரும் போர்க்களத்திலேயே மாண்டனர். போர்க்களத்தில் அவர்களது முரசங்கள் மட்டுமே எஞ்சிக் கிடந்தன.
இவற்றைப் பார்த்த அழுந்தூர் மக்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.[2] இந்த ஆரவாரம் போலத் தலைவியின் அலர் எங்கும் பரவிற்றாம்.
கம்பராமாயணம் பாடிய கம்பர் அழுந்தூரில் பிறந்தவர்.[3] இவ்வூரில் திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில் எனும் வைணவக் கோயிலும், தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில் எனும் சிவன் கோயிலும் உள்ளது. கம்பர் இவ்வூரில் பிறந்ததற்கு ஆதராமாக உள்ள கம்பர் மேடு எனும் பகுதி இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.[4][5][6][7] திருநாவுக்கரசர் இந்தத் திருவழுந்தூர்க் கோயில் கொண்டுள்ள சிவபெருமானைப் போற்றிப் பாடியுள்ளார்.
மேலும் பார்க்கவும்
- திருவழுந்தூர் தேவாதிராஜன் கோயில்
- தேரழுந்தூர் வேதபுரீசுவரர் கோயில்
- வெண்ணிவாயில்
- வெண்மணி வாயில்
- வெண்ணி
- வெண்ணிப் பறந்தலை
மேற்கோள்கள்
- ↑ http://www.tnsec.tn.nic.in/results/result%202011/Result_VPP/VPP%20NGP%20Kuthalam.pdf
- ↑ "ஆமருவி அமரர் கோமான்". Dinamani. Retrieved 2025-02-27.
- ↑ தொ. மு. பாஸ்கரத் தொண்டைமான், கம்பன் பிறந்த ஊர் - கட்டுரை, கம்பன் சுயசரிதம் - நூல், பக்கம் 100-109
- ↑ புதர் மேடாகிக் கிடக்கும் கம்பர் வாழ்ந்த `கம்பர் மேடு’ - அரசு நடவடிக்கை எடுக்குமா?
- ↑ கவனிப்பாரற்ற நிலையில் தேரழந்தூர் கம்பர் மேடு
- ↑ "கம்பர் வாழ்ந்த இடம் முறையாக பாதுகாக்கப்படுமா?". Archived from the original on 2019-03-17. Retrieved 2021-10-12.
- ↑ Kambarmedu, believed to be the birth place of Tamil poet Kambar, in state of neglect