துறையூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Infopartha
No edit summary
imported>Infopartha
No edit summary
வரிசை 31: வரிசை 31:
===பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்===
===பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்===
துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.
துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.

==புறநானூற்றில் துறையூர்==
புறநானூற்றின் 136வது பாடல் கடையேழு வள்ளல்களில் ஒருவனான ஆய் அண்டிரனைப் பற்றி ஓடைக்கிழார் பாடியது. இந்த ஓடைக்கிழார் துறையூரைச் சேர்ந்தவர்<ref name="odaikizhaar">{{cite web |accessdate = ஜனவரி 05 |accessyear = 2015 |url = http://puthu.thinnai.com/?p=9713 |title = சங்க கால சோழநாட்டு ஊர்கள்}}</ref>. அவர்
ஆய் அண்டிரனிடம், நீ பரிசில் வழங்கினால்
குளிர்ந்த நீரோடும் வாய்த்தலைகளையுடைய துறையூரில் இருந்து உண்டு மகிழ்ந்து, எம் ஊரிலுள்ள துறையின் நுண்ணிய பல மணலினும் பல நாள் நீ வாழ்கவென வாழ்த்துவோம் என்று பாடியுள்ளார்.

"தண்புனல் வாயிற் றுறையூர் முன்றுறை
நுண்பல மணலினு மேத்தி
உண்குவம் பெருமநீ நல்கிய வளனே"

திணை : அது. துறை : பரிசில்கடாநிலை. வேள் ஆய் அண்டிரனைத் துறையூர் ஓடைகிழார் பாடியது
<ref name="puranaanooru">{{cite web |accessdate = ஜனவரி 05 |accessyear = 2015 |url = http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0494_03.html |title = புற நானூறு - மூலமும்
ஔவை துரைசாமி பிள்ளை விளக்க உரையும் - பாகம் 3}}</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

17:06, 26 நவம்பர் 2016 இல் நிலவும் திருத்தம்

துறையூர்
—  தேர்வு நிலை நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருச்சிராப்பள்ளி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பிரதீக் தயாள், இ. ஆ. ப [3]
நகராட்சி தலைவர் முரளி
சட்டமன்றத் தொகுதி துறையூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஸ்டாலின் குமார் (திமுக)

மக்கள் தொகை 32,439 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

துறையூர் (ஆங்கிலம்:Thuraiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,998 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். துறையூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்

இங்கு ஐந்து புராதன கோயில்கள் உள்ளன. சிவன் கோயில், பெருமாள் கோயில், பிரசன்ன வெங்கடாசலபதி கோயில் (பெருமாள் மலை மேலே), கோவிந்தராஜ பெருமாள் கோயில் (பெருமாள் மலை கீழே) மற்றும் காசி விஸ்வநாதர் கோயில். சைவமும் வைணவமும் தழைத்து வளர்ந்த ஊர் துறையூர்.

சிவன் கோயில்

துறையூரிலிரிந்து ஆத்தூர் செல்லும் சாலையில் உள்ள இந்தக் கோயிலின் பெயர் "அருள்மிகு நந்திகேஸ்வரர் ஆலயம்". இந்தக் கோயிலின் பொருட்டு துறையூருக்கு நந்திகேச்சுரம் என்றும் ஒரு பெயர் இருந்தது. மேலும் தீர்த்த புரி, வேணுபுரி என்ற பெயர்கள் இருந்ததற்கான சான்றாக இந்தக் கோயிலில் தீர்த்தபுரீஸ்வரர் மற்றும் வேணுபுரீஸ்வரர் சிலைகள் உள்ளன. இக்கோயில் அப்பர் பெருமானால் "நாடகமாடிட நந்திகேச்சுரம்" என்றும் "நல்ல துறையூர்" என்றும் பாடல் பெற்ற தலம்.

பிரசன்ன வெங்கடாசலபதி கோயில்

துறையூரிலிரிந்து பெரம்பலூர் செல்லும் சாலையில் உள்ள புகழ்பெற்ற கோயிலாகும். இந்தக் கோயில் பெருமாள் மலையின் மேலே 960 அடி (290 மீ) உயரத்தில் உள்ளது. மலைக்கு மேலே செல்ல 5 கி மீ மலைப்பாதை உள்ளது. மேலும் நடந்து செல்வதற்கு 1500 படிகளும் படிக்கட்டில் ஏறுவோர் இளைப்பாற இரண்டு மண்டபங்கள் இடையிடையே கட்டப்பட்டுள்ளன. கரிகால சோழனின் பேரன் ஒருவர் தன் ஆட்சியின் எல்லைப் பகுதியில் இருந்த இந்த மலையின் மீதுள்ள ஒரு இலந்தை மரத்தடியில் தவமியற்றிய போது பெருமாள் வேங்கடாச்சலபதியாக பிரசன்னமாகி காட்சியளித்ததாகவும், அந்த மன்னனே இக்கோயிலில் உள்ள கருப்பண்ணார் அல்லது வீராசாமியாக வழிபடப்படுவதாகவும் நம்பப்படுகிறது. இங்குள்ள தசாவதார மண்டபத்தில் இசைத்தூண்கள் உள்ளன. ஒவ்வொரு தூணில் தட்டும்போதும் ஒவ்வொரு விதமான இசை கேட்பது இதன் சிறப்பு. ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகளில் இங்கு வழிபடுவது பிரசித்தி பெற்றது. மேலும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கிரிவலத்தில் பங்குகொள்கிறார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=துறையூர்&oldid=173679" இலிருந்து மீள்விக்கப்பட்டது