ஆள்கூறுகள்: 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55

பெரியகுளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Mayooranathan
imported>AswnBot
சி Bot:Removing stub template from long stubs
வரிசை 76: வரிசை 76:


[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]


{{TamilNadu-geo-stub}}

07:36, 24 மார்ச்சு 2017 இல் நிலவும் திருத்தம்

பெரியகுளம்
பெரியகுளம்
அமைவிடம்: பெரியகுளம், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் மரு. வைத்தீநாதன், இ. ஆ. ப [3]
நகர்மன்றத் தலைவர் ஓ. ராஜா
சட்டமன்றத் தொகுதி பெரியகுளம்

-

சட்டமன்ற உறுப்பினர்

எஸ். சரவண குமார் (திமுக)

மக்கள் தொகை 42,039 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


282 மீட்டர்கள் (925 அடி)

குறியீடுகள்

பெரியகுளம் (ஆங்கிலம்:Periyakulam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா நினைவு ஆண்கள் அரசு மேல் நிலைப் பள்ளி உள்ளது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°07′N 77°33′E / 10.12°N 77.55°E / 10.12; 77.55 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 282 மீட்டர் (925 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

பாண்டியர்களின் ஆட்சியில் இருந்த இப்பகுதி பின்பு நாயக்கர் ஆட்சி காலத்தில் தொட்டிய நாயக்கர் இனத்தை சேர்ந்த அப்பாச்சி கவுண்டர் என்பவரால் ஆட்சி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் கன்னடம் ,மற்றும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்கள் அதிக அளவில் உள்ளனர் .[5]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 42,039 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[6] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெரியகுளம் மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெரியகுளம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கோயில்கள்

  • அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்: கி.பி. 10ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முதலாம் இராஜேந்திர சோழனால் இந்த ஆலயம் கட்டப்பட்டது. [சான்று தேவை]
  • அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில்
  • வீச்சுகருப்பையா கோயில்
  • மீனாட்சி அம்மன் கோயில்
  • பெருமாள் கோயில்
  • காளஸ்திரி கோயில்
  • பகவதி அம்மன் கோயில்

போன்ற முக்கிய கோவில்கள் உள்ளது

சோத்துப்பாறை அணை

பெரியகுளம் பேருந்துநிலையத்திலிருந்து சுமார் 10 கீ.மீ தொலைவில் சோத்துப்பாறை அணை அமைந்துள்ளது. இந்த அணைக்கு கொடைக்கானல் மலை சிகரத்தில் இருந்து நீர் வருகிறது. இது பெரியகுளம் மக்களின் முக்கிய குடிநீர் தேவையை புர்த்தி செய்கிறது. இந்த மலையிலிருந்து சுமார் 7 கீ.மீ தூரத்தில் கன்னக்கரை என்ற ஊரும் அங்கிறுந்து சுமார் 10 கீ.மீ தூரத்தில் அகமலை என்ற கிராமமும் உள்ளது. கன்னக்கரை வரை மட்டுமே வாகனங்கள் செல்ல முடியும் அதற்கு மேல் உள்ள அகமலையை அடைய நடந்துதான் செல்ல முடியும்.


வராக நதி

வராக நதி பெரியகுளம் நகரை இரண்டாக பிரிக்கிறது. ஒரு பகுதி வடகரை மற்றொரு பகுதி தென்கரை என இரண்டு பிரிவாக பிரிப்பதால் மக்கள் வடகரை, தென்கரை என்று அழைக்கிறார்கள். இந்த நதி சோத்துப்பாறையில் இருந்து உபரி நீராக வருகிறது. இங்கு எப்பொழுதும் நீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருப்பதால் இதை வற்றாத நதி என்றும் காலப்போக்கில் வராக நதி என்றும் அழைக்கிறார்கள் இது பெரியகுளம் வழியாக சென்று வடுகபட்டி, மேல் மங்கலம், ஜெயமங்கலம், குள்ளப்புரம் வழியாக சென்று வைகை ஆற்றில் கலக்கிறது. இந்த நதி சோத்துப்பாறை வழியாக வரும் பொழுது மாந்தோப்புகளுக்கு நடுவிலும், பெரியகுளம் நகருக்குள் வரும் பொழுது தென்னை தோப்புகளுக்கு மத்தியிலும் செல்லும் காட்சி ரம்மியமாக இருக்கும். இந்த ஆற்றின் குறுக்கே பெரியகுளத்தில் மூன்று பாலங்கள் இணைக்கிறது. புதுபாலம், ஆடுபாலம், தண்டுபாலம் ஆகும். புதுபாலம் மற்றும் தண்டுபாலம் வழியாக மட்டுமே பேருந்துகள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியும் ஆடுபாலத்தில் ஆட்கள் மட்டுமே நடந்து செல்லமுடியும். இந்த ஆற்றில் மழைகாலங்களில் தண்ணீர் செல்லும் போது இரண்டு கரைகளுக்கு மேலே செல்லும். இந்த ஆறு வைகை ஆற்றில் கலந்து செல்கிறது.

தீர்த்த தொட்டி

ஊரின் மேற்குபதியில் பாலசுப்பரமணி கோவிலின் பின்பகுதியில் இது உள்ளது. இந்த தொட்டியிலிருந்து சுமார் 4 கீ.மீ தொலைவில் உள்ள கைலாசநாதர் மலைகோயிலில் இருந்து புமியின் அடிப்பகுதி வழியாக நீர் வருவதாக கூறப்படுகிறது. ஆண்டிற்கு ஒருமுறை இங்கு திருவிழா நடைபெறுகிறது.

கும்பக்கரை நீர்வீழ்ச்சி

இந்த ஊருக்கு அருகில் கும்பக்கரை அருவி எனும் நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது. இது பெரியகுளம் பேருந்து நிலையத்திலிருந்து சரியாக 9 கீ.மீ தூரத்தில் உள்ளது. இதன் இரு பக்கங்களிலும் பழமையான மாந்தோப்புகள் உள்ளது. கும்பக்கரை நீர்வீழ்ச்சியிலிருந்து கொடைக்கானல் மழையை அடைய குறுக்கு வழியாக சுதந்திரத்திற்கு முன் வெள்ளையர்கள் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. கும்பக்கரையிலிருந்து சுமார் 18 கீ.மீ தூரத்தில் கொடைக்கானல் மழை சிகரம் உள்ளது. நீர்வீழ்ச்சியிலிருந்து 200 அடி தொலைவில் யானை கெஜம் என்ற ஆபாத்தான பள்ளம் உள்ளது. நீர்வீழ்ச்சியிலிருந்து வரும் தண்ணீர் இதை நிறைத்து பின்னர் கடந்து செல்கிறது. நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் வழுக்குப்பறை என்னும் இடம் அமைந்துள்ளது. இந்த நீர் வீழ்ச்சிக்கு தண்ணீர் கொடைக்கானல் மழை சிகரத்திலிருந்த வருவதாக கூறப்படுகிறது. இந்த தண்ணீர் மிகவும் சுவையானதாகவும், குளிர்ந்த நீராகவும் காணப்படுகிறது. மழை காலங்களில் இங்கு குளிப்பது ஆபத்தானது. இங்கு மழை காலங்களில் எப்பொழுதும் காட்டாறு வெள்ளம் வரும் சுழல் உள்ளது. அதனால் வெயில் காலங்களில் குளிப்பது. வெள்ள ஆபத்தை தவிர்க்கக்கூடியது.

முதலமைச்சர்

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Periyakulam". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml
  6. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்

இங்கு 100 ஆண்டு காலம் பழமையும் பெருமையும் வாய்ந்த விக்டோரியா மகாராணியின் நினைவைப் போற்றும் படி நிறுவப்பட்ட அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளி உள்ளது. இப்பகுதி மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப் பட்டு இயற்கை எழில் கொஞ்சும் அழகுடன் மனதை மயக்கும் வண்ணம் உள்ளது. வராக நதி எனும் வற்றாத நதி இங்கு உள்ளது.இந்நதி பெரியகுளத்தை,வடகரை மற்றும் தென்கரை என இரு பகுதிகளாக பிரிக்கின்றது.

"https://tamilar.wiki/w/index.php?title=பெரியகுளம்&oldid=192129" இலிருந்து மீள்விக்கப்பட்டது